Thursday, 14 August 2025

சாலையோரம்.



சாலையோரம் 
மழைதுளியின் ஈரம் ஈரம்
மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

தேனே! தேனே! 
திகட்டாத தேனே! தேனே!

ஓஹோ!..


அருகில் உந்தன் முகமே!
தொலைவில் சென்ற ரணமே !
என் ரணமே!

கண்ணுக்குள்ளே! நுழைந்தாய்!
உருவம் மொத்தம் பொதிந்தாய்
வலைத்தள தேடல் எல்லாம் 
நீயே! நீயே!


மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

சாலையோரம்
ஓஹோ!.... 


கண்ணே! கண்ணே!
கண்ணமாவே! - பாரதியின்
கண்ணமாவே!


மரணம் வரையில் 
உந்தன் முகங்கள் தானே! 
தேனே தேனே! 
திகட்டாத தேனே!



மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

சாலையோரம்
ஓஹோ!.... 



- முத்து துரை


பெண் சுதந்திரம்

 சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தை போற்றட்டும்


சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தைப் போற்றட்டும்!


பெண்ணின் சுதந்திரத்தை போற்றட்டும்!


சுயம்வரம் திரும்பட்டும்

சுய மரியாதை  நிலைக்கட்டும்!

கலவரம் எல்லாம் முடியட்டும்


சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தை போற்றட்டும்!



தைரியங்கள் பிறக்கட்டும்

சரித்திரம் படைக்கட்டும்

சீண்டல் எல்லாம் முடியட்டும் ...


சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தை போற்றட்டும்!


- முத்து துரை



Saturday, 9 August 2025

தமிழ்நாடு

வந்தாரை வாழவைக்கும்

தமிழ்நாடு

தமிழ்நாடு - எங்கள் 

தமிழ்நாடு ......


நன்னானான னனா னனா...


தமிழ் மொழிக்கு இணை இல்லை

இணையில்லை  -எத்துணை 

தடை வந்தும்

தழைத்தோங்கும் தழைத்தோங்கும்.....


உயிர்களின் பிறப்பிற்கும்

உணர்வுகளின் வளர்ப்பிற்கும்

வரையறையே இங்கு வரையறையே !


நனனானா னனா னனா...

நனனானா னனா னனா...


முதன்மை மொழி என்றும் தமிழ் மொழியே

தமிழ் மொழியே ! - அனைத்து 

கண்டங்களும் அறிந்த தமிழ் மொழியே!

தலைமொழியே எங்கள் தலைமொழியே!



வந்தாரை வாழவைக்கும்

தமிழ்நாடு

தமிழ்நாடு - எங்கள் 

தமிழ்நாடு ......


சிற்பங்களின் நுணுக்கங்களும்

ஆராய்ச்சிகளின் அடிப்படையும்

அளவெடுத்து தந்த 

அறிவு மொழியே!


அழகிய வடிவமும்

இனிய இனிமையும்

தரும் மொழியே! எங்கள்

 தமிழ் மொழியே!



வந்தாரை வாழவைக்கும்

தமிழ்நாடு

தமிழ்நாடு ......


- முத்து துரை






Thursday, 24 July 2025

ஓம்

ஓம் ஓம் ஓம்ம்ம்ம் ......

நமசிவாய!

சிவாய!.....

ஓம் !!!!


ஆலகால விஷத்தை

கழுத்தில் 

கழுத்தில் கழுத்தில்

மரணம் ஜனனம்

 உனதில் 

உனதில் 

நீல நீல நீலகண்டா ....

திரு நீல நீல கண்டா கண்டா.....


போற்றி போற்றி 

உன் தாள் போற்றி!


ஐந்து எழுத்து அதிபதியே!

சரணம் சரணம் ....

உடுக்கை ஒலியே

ஓம் ஓம் ஓம் ஓம்...!


பஞ்சபூதமும் உன்னில் சரணம்....

தேவர்களுக்கு தேவா!

மகாதேவா தேவா!....



ஆலகால விஷத்தை

கழுத்தில் கழுத்தில்


அண்டம் பிண்டம் எல்லாம்

அளந்த  ஈசா ஈசா!!

கயிலை மலை வேந்தே!

பாதம் தேடி அடைந்தோம் 

சரணம் சரணம்..




ஓம் ஓம் ஓம்ம்ம்ம் ......

நமசிவாய!

சிவாய!.....

ஓம் !!!!


- முத்து துரை






Tuesday, 8 July 2025

வா வா!

விதையே விதையே எழுந்துவா!

நீ வளர வேண்டும்

வளர்ந்து வா!



மனதில் முளைத்த!! விதையே

நீ!

நீ!

எழுந்து வா!


மரமாய் வளர வேண்டும்

விரைந்து வா!


தோல்விகள் தோல்விகள்!

வேருக்கு ஊற்றாகி

வேங்கை போல 

விரைந்து வா!


பக்க கிளைகள் 

பார்க்காது பக்குவமாகி

வளர்ந்து வா!


புகழில் மயங்காமல்

விண்ணோக்கி 

வளர்ந்து வா!


விதையே விதையே

மனதில் முளைத்த விதையே

வா! வா!



தூக்கம் வேண்டாம் போ போ!

சோர்வே சோர்வே போ போ!

சுற்றும் விழியே போ போ!

சுகங்கள் வேண்டாம் போ போ!

வசை சொல்லே போ போ!

வளர வேண்டும் போ போ!



வெற்றி கனியை 

பறிக்கும் வரை 

விதையே விதையே!

மரமாய் மரமாய்!!!!!



- முத்து துரை


Wednesday, 2 July 2025

நமசிவாய!

ஓம் நம சிவாய!

ஓம் !!!!!

ஓம் நம சிவாய!


போதை போதை  போதை 

என்று திரிந்த தேகமே!


பேதை பேதை பேதை 

போல் அலைந்த தேகமே!




ஜனனம் மரணம் 

இடையில் 

ஆடும் ஆட்டமே!

ஆடும் ஆட்டமே!


ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய!

ஓம் நமசிவாய!




பொல்லாப்பு,  பொல்லாமை 

வளர்த்த தேகமே!

வளர்த்த தேகமே!



பிறர் வளர்ச்சி கண்டு 

வளர்ச்சி கண்டு 

பொறாமை கொண்டதே!


வஞ்சம், சூது, துன்பம், தீது

கொடுக்கும் தேகமே!


பொய்மை பொருட்டு

கோபம் எல்லாம் விலக வேண்டுமே!


ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய!


சிவாய நாமம் 

சிவாய நாமம் 

ஓதி  ஓதியே !


பொறுமை கொண்டு

பொறுமை கொண்டு

வாழ வேண்டுமே!


ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய!


- முத்து துரை

Tuesday, 24 June 2025

உன்

Male: 


பெண்ணே! ஓ ஓஹோ!...

காற்றே! காற்றே! 

தீண்டும் காற்றே! 

நீதானோ! நீ தானோ!


Female: 

கண்ணே! கண்ணே! 

மோகம் எல்லாம் - உயிர் 

மோகம் எல்லாம் 

நீதானோ! நீ தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Male:

புல்வெளியில் போகும் இடம்

உன் கூந்தல் வருடல் தானோ!


பூங்காற்றின் தீண்டல்களோ

உன் சுவாச மோதல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Female:

சாதத்தின் நீர் குமிழ்களோ

உன் வியர்வை துளிகள் தானோ!


மேகத்தின் நெருக்கங்களோ

உன் தோளின் சீண்டல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!





Chorus:

நினைவோ உந்தன் நினவோ!

மின்னல் என வந்தாய் 

கண்ணில் முழுவதும் நின்றாய் 

நினைவோ உந்தன் நினவோ!

ஓஹோ!.......



Male:

உயிரே! உயிரே! 

உறவை தந்திட வா வா!.......


Female: 

கனவே! கனவே! 

கலையாமல் நீயும் வா  வா!.....


நினைவோ உந்தன் நினைவோ!

நினைவோ உந்தன் நினைவோ!


- முத்து துரை


Sunday, 15 June 2025

காதலியில்லா காதலன்

காதலை தந்திடும் காதலன் 

நான் இங்கே - என்

காதலி நீ எங்கே?


பிரிவு ஒன்று வந்ததால்

பிரிந்தது இந்த உறவும் தான்



என் ஆணவமா? - இல்லை

 உன் ஆணவமா?

எது பிரித்தது நம் காதலை !


நீ இன்றி நான் இல்லை 

புரிந்தது இப்பொழுது ......

வருவாய் எந்தன் காதலே !


என் காதலி நீ எங்கே?

நீ!!! எங்கே?


இரவில்லா பகலாக !

நீயில்லா நானாக!


மழையில்லா பயிராக

நீயில்லா நானாக!



உயிரில்லா உடலாக

நீயில்லா நானாக!


உயிரே! ..........வருவாய்!

என் காதலே வருவாய்!


- முத்து துரை

Saturday, 14 June 2025

அப்பா!


என் புள்ள நீ 

சுகமா வளர .....

என் உதிரம் நான் கொடுப்பேன்!



உயிராய் வந்தாய் 

உறவை தந்தாய்  - புது

உறவை தந்தாய்!


உன்னை முதலில் பார்த்தவன் நானே!

என் மூச்சி வரை - இறுதி

மூச்சி வரை காப்பேனே!......


 நீ மெத்தையில தூங்க கண்ணே!

தாங்கும் தரையாய் மாறினேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....




 ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.........


தாய் தந்த உடல் தானே

நான் தந்த உயிர் தானே

உன்னையும், தாயையும் காப்பேனே 

உயிரே..............


மார் மேல் உதைத்தாய்

மன்னிப்பேனே!


நீ செய்த தவறுகளும்

மன்னிப்பேனே!


பேசாமல் நகர்ந்த நாட்களையும்

மன்னிப்பேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....


ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்........


என்றும் 

புரிவதில்லை என் பாசம் !



- முத்து துரை

Wednesday, 11 June 2025

உன்னில்!


விண்ணில் அழகிய நிலவை தான்

உன்னில் மறைத்து வைத்தாயோ!



மண்ணில் உருவிய கிழங்கை போல்

என்னில் உருவிய  - இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?




எந்தன் அன்னை ஈன்றது போல்

உந்தன் மூச்சில் பிறந்தேனே!

மீண்டும் பிறந்தேனே!



என்னில் உருவிய இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?




வருவாய் எந்தன் கைகோர்த்து

நாளை என்றும் நீதானே! - என் 

நாளை என்றும் நீதானே!



மலரை சுமக்கும்

மழலைப் போல் - உன்னை 

இதமாய் சுமந்தேனே!


அந்தகனுக்கு திரும்பிய பார்வை போல்

உன்னை வியந்து வியந்து பார்த்தேனே!



என்னில் உருவிய இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?


விண்ணில் அழகிய நிலவை தான்

உன்னில் மறைத்து வைத்தாயோ!



பூவுக்குள் மறைந்த கனிகள் போல்

உன்னில் என்னை மறைத்தாயோ?



உன்னில் இருக்கும் காதலை

சொல்வாய் 

எந்தன் காதலே !



என்னில் உருவிய இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?


- முத்து துரை

Tuesday, 10 June 2025

கனவு காதல்

அத்தி ஒன்னு

முத்தம் ஒன்னு

முத்தம் ஒன்னு

முத்தம் ஒன்னு



ஓ ஹோ ஹோ ஹோ ஹோ!


கனவில் வந்து 

கள்வம் செய்து

கலபம் நீயும் தந்தாயோ!



இன்று வந்தாய் 

இன்பம் தந்தாய்

நாளை நீயும் வருவாயோ?


அத்தி ஒன்னு

முத்தம் ஒன்னு

ஓ ஹோ ஹோ ஹோ ஹோ!


ம் ம் ம் ம் ம் ..............




நான் வந்தேன் 

நீ சென்றாய் 

தோழியும் பரிகாசம் செய்தாளே!


கற்பனை காதலே !

காதலை காதலை

அள்ளி அள்ளி தந்தாயே!



அத்தி ஒன்னு

முத்தம் ஒன்னு

பூத்து பூத்து சென்றாயோ!




இன்னும் இன்னும் 

கற்பனையில் வந்து வந்து

கொல்வாயோ?


என்னை

நீயும் கொல்வாயோ?



- முத்து துரை






Wednesday, 4 June 2025

நட்பு

 

நிழல் என்றும்  

நிழல் என்றும்  

நீங்காதே!


என்


நிழல் என்றும்  

நிழல் என்றும்  

நீங்காதே!


மனம் என்றும் 

மனம் என்றும் 

மறக்காதே!


உன்னைப் போன்ற சிநேகத்தை

என்றும் மறக்காதே 

என் மனம் மறக்காதே!


நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!


தோல்விகள் தோல்விகள் வந்தால் வந்தால்

தூக்கிடும் தூக்கிடும் உன் கைகள் என்றும்

கவசம் என் கவசம் என்றும் நீதான் நட்பே!


இசைவேன் இசைவேன் என்றும்

உன் வார்த்தைக்கு இசைவேன் என்றும்



நிழல் என்றும்  

நிழல் என்றும்  

நீங்காதே!


உன்னைப் போன்ற சிநேகத்தை!!!!!!


என்றும் மறக்காதே 

என் மனம் மறக்காதே!




என் யோசனை 

என்றும் 

உன் யோசனை!!!!!



நம்பினேன் நம்பினேன் 

நானுமே உன்னை!


நட்பே நட்பே  - என் 

நட்பே நட்பே!



- முத்து துரை 








Thursday, 29 May 2025

உருக்கேடு!.

எத்துணை எத்துணை ஏமாற்றம்  
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்  



பெண்ணே ஓ பெண்ணே!






என்னில் கரைந்து 
தன்னில் மறைத்து
இன்பம் கெடுத்து
சிரிகின்றாய்!


இன்பம் கொடுத்து
இதயம் வளர்த்து
இளமையை தான் 
இழுகின்றாய்!



பெண்ணே ஓ பெண்ணே!



வஞ்சகம் வளர்த்து 
வஞ்சகம் வளர்த்து 
வாழ்வை தானே 
வதைகின்றாய்!




பெண்ணே ஓ பெண்ணே!





காதல் வளர்த்து
கவிதை வரைந்து
கானம் கசந்து
கிடக்கின்றாய்



எத்துணை எத்துணை ஏமாற்றம்  


பெண்ணே ஓ பெண்ணே!



உன்னில் சிதைந்து
தன்மம் மறைந்து
தன்னை மறந்து
சிதைகின்றேன்.




வன்மம் வளர்ந்து 
வன்மம் வளர்ந்து 
என்னை அழிக்க 
நினைகின்றேன்.......






பெண்ணே ஓ பெண்ணே!

எத்துணை எத்துணை ஏமாற்றம்  
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்  




- முத்து துரை




Monday, 26 May 2025

மாயை!

மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


ஞானியாய் ஞானியாய்

ஆன பின் 

எல்லாம் மாயையே!



மயங்கினேன் நானுமே!

விழுந்தேனே நானுமே!

மாயையில்! மாயையில்!



ஓஹோ ஹோ!


ஆசைகள் அலைமோதியே!

ஆரவரம் செய்ததே!!

ஆதிக்கம் வந்ததே!

எல்லாம் மாயையே!



மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


கனவுகள் பல வந்து 

கலவரம் பல கண்டு 

கண்ணீர்கள் பல சிந்தி

எல்லாம் மாயையே!  யே!......


பிறந்த பலன் புரியாமல்

வளர்ந்த பயன் அறியாமல் 

முதிர்ந்த பின் 

எல்லாம் மாயையே யே!........


மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


ஞானியாய் ஞானியாய்

ஆன பின் 

எல்லாம் மாயையே!


- முத்து துரை






Friday, 23 May 2025

ஈசன்.

ஈசனே! 

எந்தன் நேசனே!


ஈசனே!  நேசனே!



நீர் குடம்!!!

நீர் குடம்!!!

நீந்தி நீந்தி....


ஆயிரம் ஓர் ஆயிரம் 

வீரர்கள் வென்று


பிண்டம் மென் பிண்டம் நுழைந்து 

தவமாய் கடும் தவமாய் 

உருவம் கொண்டு வந்தேன் 

இவ்வுலகம் வந்தேன்......


ஏந்திய தாயின் மீதிலே!....

எட்டி  எட்டி மிதித்தேன் தீதிலே!...


ஏட்டு கல்வி தான் படித்தேன் 

எட்டு திசையும் அலைந்தேன்!


எல்லாம் நானே! 

என்று மதிக்கா நானே!


ஈசனே! 

எந்தன் நேசனே!


என் குடம் உடையும் நேரம்

மண் குடமாய் போகும் நேரம்

என்னம்மெல்லாம் கண்டேன் உன்னை

எத்துனை எத்துனை தவறுகள் செய்தேன் 

எத்துணை எத்துனை வலிகள் கொடுத்தேன்


நித்திரையில் உன்னை அடைந்தேன்

இறுதி 

நித்திரையில் உன்னை அடைந்தேன்.....


ஈசனே! ஈசனே!

எந்தன் நேசனே!


நேரிலே எந்தன் நேரிலே!

வாழ்விலே எந்தன் வாழ்விலே!

நீதானே என்றும் நீதானே!



நானுமே நானுமே!

கர்வம் கலைந்ததே!

நீயுமே! நீயுமே!



ஈசனே! 

எந்தன் நேசனே!


ஈசனே! 

எந்தன் நேசனே!


நேசனே!

ஈசனே! 

எந்தன் நேசனே!


- முத்து துரை












Monday, 21 April 2025

வாழ்கை

கண்ணாடி கோப்பையா

கவிழ்ந்தது இந்த வாழ்க்கையா?



முன்னாடி நீ இருக்க!

முதிர்ந்தது இந்த வேட்கையா?


சொல்லாடி சொல்லாடி சோர்வுற்று போனதே! 

சொர்க்கமா? நரகமா? 

கண்ணீரில் போனதே!


பாச கயிறு இழுக்க

பார்வைகள் எல்லாம் இழுக்க

நல்லதும் கெட்டதும் இருக்க

நல்லுடலும் சாஞ்சதே! 


கண்ணாடி கோப்பையா

கவிழ்ந்தது இந்த வாழ்க்கையா?

முன்னாடி நீ இருக்க!

முதிர்ந்தது இந்த வேட்கையா?

தந்நானனா !தந்நானனா னா...



விதியின் வலிமையா!

விரட்டிடும் நாட்களே

விடைபெறும் மனமும் 

விடைபெறும் மனமும்


முன்னாடி நீ இருக்க!

முதிர்ந்தது இந்த வேட்கையா?



கண்ணாடி கோப்பையா!!!!!!!


- முத்து துரை


Sunday, 23 March 2025

அழகு

பக்கா அழகுல

பக்குவமா என்ன

சாட்சி     சாட்சிபுட்டியே! 


அத்தமவளே

அழகா நீயும்

பொறந்துபுட்டியே!

அழகா பொறந்துபுட்டியே!





மாமங்காரன் நான் 

முற மாமங்காரன் நான் 

மயங்கிபுட்டேனே! -உன் அழகுல

மயங்கிபுட்டேனே! 


பக்கா அழகுல

 என்ன என்ன

நீயும்

சாட்சிபுட்டியே! 



கண்ணாடி வளவில

கட்டங்கட்டி என்ன

கட்டிப்புட்டியே!


கருமையை தடவி 

கருவிழியால்

கவுத்துபுட்டியே!


கண்டாங்கி புடவை 

கட்டி கட்டி 

இழுத்துபுட்டியே!


மாமன் நானும் தான் 

மாட்டிகிட்டேனே! 

உன் அழகுல 

மாட்டிகிட்டேனே! 



பக்கா அழகுல

பக்கா அழகுல!!



- முத்து துரை




Wednesday, 5 March 2025

நிலா!

தாநனனனா தாநனனனா!

தாநனனனா தாநனனனா


ஒத்த நிலவு நீ

மொத்த அழகுல

சித்தம் சிதைக்கிற 

சித்தம் சிதைக்கிற 


வட்ட வடிவில

சொட்டு உசுரையும்

சொக்கி எடுக்கிற

சொக்கி எடுக்கிற!




சேவல் கூவையில

மின்னி மின்னி தான்

கிரங்க அடிக்கிற.....


நீயும் கிரங்க அடிக்கிற !


ஒத்தப் பாதையில 

கண்ணாமூச்சியா

சுத்தும் சூரியனும் கண்டுபிடிக்கல 

உன்ன கண்டுபிடிக்கல



சுட்டெரிக்கும் சூரியனிடம்

குளிர் காயுற - நீதான் 

குளிர் காயுற...



காட்டிக் கொடுக்குது 

விண்மீன்களும்

உன் வெட்கத்தை 

காட்டிக் கொடுக்குது....


ஒத்த நிலவு நீ

மொத்த அழகுல

சித்தம் சிதைக்கிற ....


பொட்டு வச்ச பௌர்ணமியும் 

பொத்தி பொத்தி வளருது


கோபத்தால் திரும்பி கெடக்குற 

அம்மாவாசை இருளிலே ......


ஆய்வு நடக்குது 

ஆய்வு நடக்குது 

உன்ன முழுசா தெரிஞ்சுக்க தான் 

ஆய்வு நடக்குது!


ஒத்த நிலவு நீ

மொத்த அழகுல

சித்தம் சிதைக்கிற

சித்தம் சிதைக்கிற ....



வட்ட வடிவில

சொட்டு உசுரையும்

சொக்கி எடுக்கிற 

சொக்கி எடுக்கிற ......


- முத்து துரை

Tuesday, 4 March 2025

அன்னையின் புலம்பல்

ஆராரோ!

பாடுகிறேன் தூங்கிவிடு

உன் அன்னை 

என்னை நீயும் படுத்தாதே!


பெண்ணாய் இங்கே பிறந்ததனால்

நூறு கைகளை நானும் கொண்டேன்


ஒன்றிக்கு கூட ஓய்வு இல்லை 

அதை நானும் கண்டேன்.


ஆராரோ!

பாடுகிறேன் தூங்கிவிடு

உன் அன்னை 

என்னை நீயும் படுத்தாதே!



பிறந்த இடத்திலோ  நான் செல்லப்பிள்ளை!

புகுந்த இடத்தில் நானோ

மல்லி இலை!


தூக்கம் எனது இல்லை 

உனது என்று ஆனதம்மா!

என் உயிரை கூட 

உனக்கு  கொடுத்தேனம்மா!!


ஆராரோ!

பாடுகிறேன் தூங்கிவிடு

உன் அன்னை 

என்னை நீயும் படுத்தாதே!



பள்ளி சென்றால் மாறிவிடும் 

சொன்னது ஒரு கூட்டமம்மா

பணி சுமைகள்!

மட்டும் 

இங்கே குறைவதில்லை 

நீயும் பாரம்மா!


விடுமுறையிலும் ஓய்வு 

என்பது இங்கு இல்லை

என்னைப் பற்றி 

ஏன் இங்கு கவலை கொள்வதில்லை....


ஆராரோ!

பாடுகிறேன் தூங்கி விடு ......

தூங்கிவிடு!



- முத்து துரை


Monday, 3 March 2025

ஆராரோ

ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!


உன்னைப் பற்றி  சிந்திக்க 

இங்கே யாருமில்லை!

உன் சிரிப்பின் ரசனையை அனுபவிக்கும் 

கண்கள் இங்குமில்லை!



பறவைகள் தூவிய 

விதை போல் உன்னை நீயே வளர்த்து விடு


தனியென்று கண்ணே நீயும் கலங்காதே!

உன் துணை என்று கரம் பிடிக்கும் வருந்தாதே!


தாயும் இல்லை

 தந்தையும் இல்லை 

என்று ஏங்காதே!


அவர்கள் செய்த 

தவறுக்கு நீயும் வருந்தாதே!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!



அகழிகள் சூழ்ந்த உலகமடா

அகிம்சையாய் நீயும் வந்தாயடா!


அன்னை வரம் வேண்டும் 

ஆயிரம் உள்ளங்கள் இங்கே இருக்குதடா!

அவர்களின் கையிலே

 நீயும் கிடைக்கவில்லையடா!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!

ஆராரோ 




உன்னைப் பற்றி  சிந்திக்க 

இங்கே யாருமில்லை!

உன் சிரிப்பின் ரசனையை அனுபவிக்கும் 

கண்கள் இங்குமில்லை!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!


ஆசையின் அவசரத்தில் வந்த கவிதை நான்!

ஆதரவில்லா குழந்தை நான்!


யார் யாரோ வந்து விட்டு செல்கின்றார்

என் அன்னை நீ எங்கே சென்றாயோ?


ஆராரோ 

நானே இங்கு பாடி விட்டேன்!

என் கன்னம் 

நானே இங்கு வருடி விட்டேன்!



 


- முத்து துரை

Sunday, 2 March 2025

நீ

ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

ம்ஹூம் ஹூம்ம்ம் ம்ஹூம்


காதலில் நானும் விழுந்தேனோ!
விழுந்தேனோ!

கரைகளை நானும் அடைவேனோ!
அடைவேனோ!

உன் கைகளை நெருங்கவே 
என் கைகள் ஏங்குதம்மா!

பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!

மழையின் மென்மை 
வருடும் முன்னே
வெயிலின் தாக்கம் தொடங்கியதே!

காதலின் மென்மை தொடங்கும் முன்னே
பிரிவின் தாக்கம் சூழ்ந்ததம்மா!

நிலவை நான் பிடிக்க முயலும் முன்னே
எதிரில் நீ வந்து நின்றாய்

கடலை நான் கடக்கும் முன்னே 
கரையாய் என் முன்னே நீ வந்தாய் 


ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ




உன் கைகளை நெருங்கவே 
என் கைகள் ஏங்குதம்மா!

பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!



மழலை மொழிகள் புரிவதில்லை
அன்னை தவிர அறிவதில்லை
நான் பேசும் மொழிகள் 
புரிவதில்லை
உன்னை தவிர 
உன்னை தவிர


பழங்களின் சுவைகள் 
மறைவதில்லை
நாவிற்கு மீண்டும் கேட்கிறதே!

உன்னுடைய நினைவும் 
மறப்பதில்லை
திரும்ப திரும்ப 
மலர்கிறதே! 
மலர்கிறதே!


வேர்களை விட்டு 
வீழ்ந்தாலும் 
மரங்களை வேர்கள் 
வெறுப்பதில்லை


என்னை விட்டு 
போனாலும் 
உந்தன் நினைவு 
வெறுப்பதில்லை!
வெறுப்பதில்லை!

ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ


காதலில் நானும் விழுந்தேனோ!
விழுந்தேனோ!

கரைகளை நானும் அடைவேனோ!
அடைவேனோ!

உன் கைகளை நெருங்கவே 
என் கைகள் ஏங்குதம்மா!

பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!


- முத்து துரை

Saturday, 1 March 2025

கருப்பு



உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே

உள்ளம் வெள்ளையானதே

மனமே என் மனமே!



கருப்பு நிற சிலைகளுக்கும்

என் மனசுக்கும் ஒற்றுமை

இருக்கிறதோ

இரண்டுமே உணர்ச்சி அற்றதுவோ!

அற்றதுவோ!


 நிழலின் நிறத்திலே இருப்பதனால்

நிஜங்கள் இங்கே புரிவதில்லை!


நிலவை வர்ணிக்கும் 

வரிகளுமே 

நிஜத்தில் இங்கே மறைத்திடுமே

கருமையை தான்!


ஓ ஓ !


உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே!!


ஓ ஓ ஓ!



பிம்பம் காட்டிடும் கண்களை தான் 

பிரம்மனும் படைத்தான் 

கருப்பாக!


கருப்பு கலையென்று 

சொல்லிடும் மனங்களுமே

கருமையை ஏன் மணப்பதில்லை!


மணம் வீசும் பூக்களுமே

மலர்கிறதே 

மலர்கிறதே

இரவின் மடியிலே மலர்கிறதே!


கருமை இல்லை 

என்றால் 

உலகம் இங்கே சுழல்வதில்லை!


கருமையை வெறுத்திடும் முகங்களுமே

முடிகளில் கருமையைத் தேடுகிறதே!

தேடுகிறதே!



உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே


உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே!


- முத்து துரை



Wednesday, 26 February 2025

நீ நான்

நீ கவிதை  

நான்  கவிஞன் 

உன் வரிகளில் நான் வாழ்வேன்!


நீ கற்பனை  

நான் காதலன் 

நம் காதலை வரைந்திடுவேன்.


நீ பேனா  

நான் காகிதம்  

உன் பெயரை தினமும் எழுதிடுவேன்.


நீ சிந்தை 

நான் செயல் 

உன் எண்ணம் போல் நானிருப்பேன்.


நீ கவிதை  

நான் கவிஞன் 

உன் வரிகளில் நான் வாழ்வேன்!





நீ கண்ணீர்  

நான் கைகுட்டை 

நீ விழும் போது தாங்கிடுவேன்.


நீ   சிற்பி

நான்  சிற்பம்

உன் வலிகள் முழுவதும் நான் ஏந்துவேன்....


நீ பனிக்காற்று

நான் செவிப்பறை

காதோரம் நீ வீசிட காத்திருப்பேன் ....


நீ பாதம்

நான் பாதை

நீ செல்லும் வழியிலே உருவாகுவேன் ......


நீ நீர் துளி

நான் தாகம்

தாகத்தை தணிக்கும் வரை தவித்திருப்பேன்



நீ மனைவி  

நான் கணவன் 

காலம் வரை உடன் இருப்பேன்......


நீ தேவதை

நான் யாசகன்

யாசித்தே வாழ்ந்திடுவேன் ....




நீ தேவதை

நான் யாசகன்

யாசித்தே வாழ்ந்திடுவேன் ....



- முத்து துரை

Tuesday, 25 February 2025

பேருந்து காதல்



பட்டாம்பூச்சிக் கூட்டம்  

படபடவென என்னுள்


ஏதோ செய்கிறதே

என்னுள் ஏதோ செய்கிறதே!


கூட்ட நெரிசலில் 

கூடுவிட்டு கூடு பாய்ந்து 

கூராாய் நுழைந்தது 

உன் முகமே!


இருக்கைகள் இருந்தும் - நீ

இருக்கும் இடம் தேடி

கால்கள் நகர்கிறதே! என்

கால்கள் நகர்கிறதே!


பாலுக்கும், துகளுக்கும்

தேனீர் குவளையில்

மலர்ந்திடும் காதல் போல்

மணம் வீசுகிறதே!



பட்டாம்பூச்சிக் கூட்டம்  

படபடவென என்னுள்

ஏதோ செய்கிறதே

என்னுள் ஏதோ செய்கிறதே!



ஜன்னலோர இருக்கைக்கு 

அலைமோதும் கண்கள்

இன்று 

உன்னை நோக்கி அலை மோதுகிறதே!



அவன் யார் என்று தெரியவில்லை 

பேர் என்ன   ம்ஹூம்ம்..... 

மனம் மட்டும் அவன் பின்னே 

என் மனம் மட்டும் அவன் பின்னே


தினம் தினமும் பயணித்தேன் 

இன்றாவது உன் கண்கள் 

இன்னிசைக்காதா? 


என்னை நோக்கி நீயும்

உன்னை நோக்கி நானும்


ஆ ஹா ஆ ஹா ஆ  ஹா.... 


படிக்கட்டில் பயணம்

படபடக்குது என் மனம்

படைப்பாளனே உள் வருவாயோ

ஏங்குது பெண் மனம் ....




நீ காண வேண்டும் என்று

நாளொரு வண்ணம் நானும்

நாளிதழ் ஏந்துகின்றேனே....



உன் புத்தகங்கள் தரும் வேளை

என் சத்தங்கள் கேட்கிறது

உன் பெயர் என்ன தெரிந்துகொள்ள

என் சத்தங்கள் கேட்கிறது ......



பட்டாம்பூச்சிக் கூட்டம்  

படபடவென என்னுள்

ஏதோ செய்கிறதே


-முத்து துரை



Sunday, 23 February 2025

தாவணிக் கனவுகள்

கண்ணுக்குழி அழகே

கூறு போடும் திமிரே

மச்சங்களில் கோர்த்த

மாமனின் மகளே!


ஆயிரம் கனவுகள்

நானும் கண்டேன் உன்னுடனே

அதைப் பேசிட வேண்டும் 

நாட்கள் முழுவதுமே


வயல்களின் நடுவே ஓடிடும் வரப்பே

மயில்களின் அழகை காட்டுது உன் முகமே

 நெருஞ்சிலின் முள் போல் 

குத்துது உன் நினைவே

ஓடைகள் தேடும் ஓரிரு துளியே!


கரிசக்காட்டு மணமே

காட்டுது உந்தன் நிறமே

தென்னங் கீற்றின் நடுவே

கீச்சிடும் குயிலே!

பதநீரின் போதை

தரும் உந்தன் உதடே!


தட்டாம்பூச்சி பிடிக்க 

தாவிடும் கையே

தாவணிப் பொண்ணே

தங்கமே என் கண்ணே!


முறுக்கு மீசை வச்ச மாமா முறுக்காதே

மொத்த அழகில் என்னை நீயும் மயக்காதே!

உழவு காட்டில்

உசுர நீயும் வாங்காதே

உதவிக்கு வந்தா 

உரசி உரசி போகாதே!


ரொம்ப தான் அழுத்துகிற நீ தான்

ரொம்ப தான் சிலுத்துகிற நீ தான்

ஆசையா கொஞ்ச வந்தா

ஆயுதம் ஏந்துகிற நீயும் 

தொட்டாச்சிணுங்கி கண்ணத்தான்

தொடாம போவேணோ நானும் தான்


தாலி தான் கட்டிய பின்பு தான்

தாரம் தான் ஆன பின்னும் தான்

தாடிக்குள் தாவணி கனவுகள் துடிக்கிறதோ?



கண்ணுக்குழி அழகே

கூறு போடும் திமிரே

மச்சங்களில் கோர்த்த

மாமனின் மகளே!


தொட்டாச்சிணுங்கி கண்ணத்தான்

தொடாம போவேணோ நானும் தான் ......


- முத்து துரை


Friday, 21 February 2025

தலைவனை தேடும் தலைவி


கள்வனே! கள்வனே!

உன்னை தேடுது பெண்மையே!

மாற்றினாய் மாற்றினாய்

என்னையும் உன்னை போல்

தூரதேசம் சென்றதால்

தூது விட்டேன் என்னையும் ....

துடிக்குது பெண்மையே

துள்ளி நீ வருவாயே!



தொலைதூர பயணம் சென்றேன்

தொடுவானம் நீதான் என்றேன்

நெடுஞ்சாலை தனிமை எல்லாம்

நினைவோடு நானும் சென்றேன்!

மேகங்களின் மேலே சென்றாலும்

தேடுது உந்தன் முகமே!




கொடிகள் படர தேடும் 

செடி போல் 

உன்னை  தேடுது  பெண்மையே!

தொலைபேசி மணியோசை

அதில் கேட்கும் உன் ஓசை

நேரிலே எப்பொழுது

தினம் கேட்கும் என் ஓசை.

கள்வனே! கள்வனே!



ஓ!

கடற்கரைச் சாலை எல்லாம்

கலவரம் கொண்டது

நீ இன்றி வந்ததால்

கலவரம் கொண்டது

கருவிழியே உன்னையுமே

கடத்திட துடிக்குது என் மனமே!



கடிதம் வரைய நினைத்து 

கவிதைகள் பல கோர்த்து 

எந்தன் துணையே! 

உந்தன் நினைவில்

உருகுகிறேன் நானுமே!



பாதகை உந்தன் பாதகை

தினம் வருடும் கைகளே!

நீ அனுப்பிய குறுஞ்செய்தியை

மனனம் செய்யும் பெண்மையே! 

வார்தைகள் முழுவதிலும்

வாழ்கிறேன் உன்னுடனே.....

தூரதேசம் சென்றதால்

தூது விட்டேன் என்னையுமே ....


திங்கள் தேடும் தேசம் இது

தென்றல் தேடுது என் மனது

பரிச்சயம் இல்லை முகங்களுமே

பதிவை தேடுது என் மனமே

உந்தன் 

பதிவை தேடுது என் மனமே!



தொலைபேசி மணியோசை

அதில் கேட்கும் உன் ஓசை

நேரிலே எப்பொழுது

தினம் கேட்கும் என் ஓசை.



வருவாயோ! சீக்கிரம் 

வருவாயோ! 

நித்தம் நித்தம் 

கரைகிறது பெண் மனமே!


- முத்து துரை

Wednesday, 19 February 2025

காதலியே!

காதலியே காதலியே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 


காதலி.         யே.          காதலி.          யே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 




காகித படகில் காதலியே!

கைகோர்த்து வந்த

காதலியே!


கண்ணோடு நாம்

கண்ணோடு நாம்

பேசிடும் வார்த்தைகள்

காலங்கள் எல்லாம்

காதலியே!


உன்னோடு நான்

உன்னோடு நான்

வாழ்ந்திடும் வாழ்க்கை

காதலியே!


காலங்கள் எல்லாம்

காதலியே!




கனவுகள் தான்

கனவுகள் தான்

அழகாய் உன்னோடு

காதலியே!


அகிம்சையாய் உள் நுழைந்த 

காதலியே!


பூவோடு நான்

பூவோடு நான்

உன் கூந்தல் சூடிட

காதலியே!


எனக்கென்று தான்

எனக்கென்று தான் 

அனைத்தையும் செய்த

காதலியே!


உனக்கென்று நான் 

உனக்கென்று நான்

தருவேன் உயிரை  

காதலியே!




காதலியே காதலியே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 


- முத்து துரை

Monday, 17 February 2025

கவி கவியாய்

கவி கவியாய்! 

கவியாய்!

உந்தன் புகழை பாட வா!


வேலா! 

உந்தன் புகழை பாடவா !


செவி செவியாய் 

செவியாய் 

எந்தன் 

செவி வழியாய் கேட்ட 

புகழை பாடவா!



கவி கவியாய்!

கவியாய்

புகழைப் பாடவா !


மயிலுடன் நீ வரும் 

அழகை பாடவா!


மயில்வாகனனே உந்தன்

அழகை பாடவா!


தமிழுக்கு நீ தந்த 

தகவல் பாடவா!


அகரங்களை முதலாக

அடுக்கி பாடவா!

அடுக்கி பாடவா!


உந்தன் புகழை பாடவா!

நீ அருளிய கொடையை பாடவா!


கவி கவியாய்

கவியாய்

நான் பாடவா !


அவ்வையிடம் வினவிய

வினாவை பாடவா!


குழந்தையில் நீ செய்த 

குறும்பை பாடவா!


குமரனாய் நீ செய்த

காதல் பாடவா !


என்ன நான் பாட 

என் முருகா 

உன்னை பற்றி என்ன நான் பாட

உன்னை பற்றி பாட

அருளைத் தருவாய் எனக்கு

அரோகரா! அரோகரா!


- முத்து துரை

Saturday, 15 February 2025

கணவன் - மனைவி

சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


மழையாய் பெரும் மழையாய்

மாறிவிட்டாய்!


பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

நானும் தொலைந்தேனே 

உன்னுள் நானும் தொலைந்தேனோ!


மொழிகள் முழுவதும் நீயானாய்!


வலைத்தள தேடல்  முழுவதும் நீயானாய்!


வார்த்தையாய் 

என் நெஞ்சில் நீ நுழைந்தாய்!


வரிகளாய் 

காதல் வரிகளாய் 

என்னுள்ளே நீ மிதந்தாய்!


இசையாய் 

மெல்லிசையாய் 

என்னையும் நனைய வைத்தாய்!


உன் பெயரும், என் பெயரும் சேர்ந்திடவே

உன் கையும், என் கையும் கோர்த்திடவே

உன் உறவும், என் உறவும் சேர்ந்திடவே

நாளும் நெருங்கியதே!

இனிய நாளும் நெருங்கியதே!



சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


நாணம் வழிகிறதே! 

என்னுள் நாணம் வழிகிறதே!


நாளும் வருகிறதே!

உன்னுடன் பயணிக்கும் 

நாளும் வருகிறதே!


கைகோர்த்து கதைக்க 

பல கதைகள் இருந்தும்

கதைக்காமல் செல்கின்றோம் நாம்தான்!

கதைக்காமல் செல்கின்றோம் நாம் தான்!


நாளும் வருகிறதே

உன்னுடன் சேரும் 

நாளும் வருகிறதே!


கானல் மழையில் நனைகின்றேன்

கனவுகளுடன் 

கானல் மழையில் நனைகின்றேன்!


சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


மழையாய் பெரும் மழையாய்

மாறிவிட்டாய்!


- முத்து துரை








Thursday, 13 February 2025

ஒரு கவிதை!

ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!


கண்கள் பேசிடும் காதலை
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!

ஓ!

இது காதல் தானோ!

ஓ!

இது போதை தானோ!


வானிலை மாற்றம் நிகழுதே!

புயலும் இங்கே தென்றலாய் வருடுதே!

பேரிறைச்சலும் இன்னிசையாய் கேட்குதே!



காதலின் தினம் இன்று 
காதலால் நிரம்புதே!

கானங்களின் இசைகளும்
காதலை இன்று சொல்லுதே!



ஹே !

பூந்தோட்ட கிளி தானே!

ஹே!

புது வெள்ளை மழை தானே!




உன்னைப் பார்த்ததும்
நகரவில்லை - என் 
நாட்களும்!

ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!


கண்கள் பேசிடும் காதலை
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!


பறந்திட பறந்திட 
மனம் இன்று துடிக்குதே!

அவனைக் கண்டதும் 
காரணம் இன்றி கரையுதே!



மெல்லிசை தென்றலும் நீ தானே!
மேல் அங்கமும் நீ தானே!


வெண்ணை திருடிய 

கண்ணன் போல்

உன்னை திருடிட 

மனம் இங்கு துடிக்குதே!


ஓ!

புது வெள்ளை மழையா!

ஓ!

பனிகளின் சிலையா!



ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!



லால லல லால லலலா

- முத்து துரை







Wednesday, 12 February 2025

என் காதலே !

என்னோடு வா! என் காதலே! 

என் காதலே!


ஊசியில் நுழையும் நூல் போல் 

உன் நினைவுகள் 

என் மனதில் துளைத்துத் துளைத்து 

துளையிடுகிறதே!


சிரிப்பை மறந்த என் இதழ்கள் 

மவுனத்தை மட்டும் உதிர்கிறதே!


பேனா முனை கிழித்து 

காயம் பட்ட காகிததிற்கு மருத்தாக

கவிதைகள்  - உன் பெயரை

எழுதி எழுதி தேய்கிறதே.!


என்னோடு வா என் காதலே !

கைகோர்க்க துடிக்குது என் மனமே!


காயம் பட்ட என் இதயத்திற்கு

காதலை நீ தருவாயோ! !


அலைகளில் நீத்தும் நிலவின் 

முகம் போல் - என் நினைவிலே உன்

முகம் தானே நீந்துகிறதே!


என்னோடு வா! என் காதலே! 


என் மவுனத்தை களைக்க 

என்னோடு வா! என் காதலே! 



உன் கூந்தலை கோதிட

என்  நகக்கண்கள் துடிக்கிறதே!


ஆயிரம் ஜனனங்கள் நான் எடுப்பேன்

உன் கூந்தலில் மரணித்திட 

ஆயிரம் ஜனனங்கள் நான் எடுப்பேன்


என்னோடு வா! என் காதலே! 

என் பயணங்கள் முடிவதற்குள்

என்னோடு வா என் காதலே !


- முத்து துரை








Tuesday, 11 February 2025

உறவுகளும் தானே

துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் உறவுகள் தானே!


பணத்தின் மதிப்பு இல்லை என்றால் தெரியும்

குணத்தின் மதிப்பு பணத்தினால் புரியும்

பணமா? குணமா? அளவிடும் உறவும்!


குணம் மட்டும் இருந்தால்

குழப்பங்கள் இல்லை


குழப்பத்திற்கு என்றே வரும் 

இந்த உறவுகளும் தானே!

உறவுகளும் தானே!


அற்பனுக்கு இங்கே வாழ்வு வந்த போதும்

சொப்பனத்தில் இருந்தே வீழ்ந்து விடும் வாழ்வும்!


துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் உறவுகள் தானே!


பகலவன் போலே 

பகிர்ந்திடும் உறவும் 

கிடைத்துவிட்டால் நீயும்

கொடுத்து வைத்தவன் தானே

கொடுத்து வைத்தவன் தானே!


போதைக்கு உண்டு

பாதைக்கு இல்லை!


பகட்டு இல்லா உறவும்

கிடைத்துவிட்டால் நீயும்

வென்றிடுவாய் உலகை!

வென்றிடுவாய் உலகை!


அன்றிருந்து இன்றும்

மாறவில்லை உலகும்

மாறவில்லை உறவும்

மாற்றம் நோக்கி

நாமும் நகர வேண்டும் தானே!


துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் லாலலலாலா!


- முத்து துரை




Sunday, 9 February 2025

ஏன் பிரிந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்

ஏன் என்னை வதைத்தாய்!


என் உயிர் வரை கலந்தாய்

என் உணர்விலும் உறைந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்!


நிழல் எல்லாம் நீயாகி என்னுள் இருந்தாய்

நிஜமெல்லாம் நீயாகி என்னுள் வளர்ந்தாய்


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்!!!


நித்தம் நித்தம் உன் நினைப்பில் 

பித்தன் ஆனேனே!

சித்தம் எல்லாம் -என் 

சித்தம் எல்லாம் நீயும் ஆனாயே!


நீயும் ஆனாயே எல்லாம் 

நீயும் ஆனாயே! 


அலைகளில் முழ்க பார்த்தேன் 

அந்த அலைகள் கூட வெறுத்தது

தன்னில் இணைக்க மறுத்தது 


காதல் தோல்வியில் 

கண்ணீர் வடித்தேன் 

கண்கள் முழுதும் 

நீதான் நின்றாய்!


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்!!!


இதய கூட்டை 

இடித்து பாத்து 

இனிப்பை தந்தாயே!


மழையில் முளைத்த காளானாக 

நானும் ஆனேனே -உன்னிடம்

நானும் ஆனேனே!


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னுள் பிறந்தாய்


காதல் கோட்டையைத் தகர்த்து பாத்து

கனவில் வந்து 

புன்னகை புரிகின்றாய்.


நீயும் புன்னகை புரிகின்றாய்!


தனநனநனந தனநனநனந


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்

ஏன் என்னை வதைத்தாய் 


-முத்து துரை





Thursday, 6 February 2025

அறிமுகம்

அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே


அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


அறிமுகம் இல்லை அவளிடமே!


அவன் வசமானது என் மனமே!


தூரத் தேசத்து ஓவியமே 

தூரிகை வரைந்தேன் உன்னையுமே 


காதல் கடிதம் நான் எழுத 

கற்பனையில் மிதந்தேன் உன்னுடனே


வண்ணம் கொண்ட வானவில்லே 

வருவாயோ எந்தன் மேகத்திலே 

வலக்கை பிடித்து வலம் வந்து 

வாழ்க்கைத் துணையாய் ஆவாயோ!


கற்பனை நிறைந்த காதலனே!

காதலால் என்னை கொல்வாயோ

காதலால் என்னை கொல்வாயோ!


வண்ணம் கொண்ட வானவில்லே

வாழ்க்கைத் துணையாய் ஆவாயோ!


கற்பனை நிறைந்த காதலனே!

காதலால் என்னை கொல்வாயோ!


அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே


அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


வரிகளின் அலங்காரம் இசையாக என் முன்னே!

வார்த்தையின் அலங்காரம் கவியாக என் முன்னே!


பாடலின் முதல் வரியும் 

பயணிக்கும் பல்லவியும் 

இடைத்துடிக்கும் நாதமும்

உருகிடும் வார்த்தையும் நீயே என்னம்மா!


காமத்தின் மறுபெயரும் 

காதலின் காவியமும் 

காட்டிடும் அரக்கனும் 

கண் பேசும் கவிஞனும் நீயே என்னவா!.


அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே

அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


தூரத் தேசத்து ஓவியமே 

தூரிகை வரைந்தேன் உன்னையுமே 


காதல் கடிதம் நான் எழுத 

கற்பனையில் மிதந்தேன் உன்னுடனே



- முத்து துரை 

Tuesday, 4 February 2025

திருநெல்வேலி

திருநெல்வேலி வந்து பாரு

திருப்பங்கள் உனக்கு உண்டு பாரு!


திருச்செந்தூர் முருகனடா

திருப்பங்கள் உனக்கு தருவானடா!


வேலியாய் நாங்கள் இருப்போமடா

வேங்கையே வந்தாலும் எதிர்ப்போமடா

திருநெல்வேலி சீமையடா

சீவலப்பேரி கோட்டையடா!


உப்பள காத்து வீசுதடா

உசுரா நாங்க இருப்போமடா!

திருநெல்வேலி சீமையடா

சீவலப்பேரி கோட்டையடா!


பாலைவனமும் கிடக்குதடா!

பசுநெல்லும் இங்கே விளையுதடா!

ஐந்து நிலமும் இருக்குதடா!

ஐயம் வேண்டாம் உனக்கடா!


மலைகளும் இங்கே மலருதடா

மரங்களும் இங்கே மகிழுதடா

வயல்களும் இங்கே வருடுதடா

கடல்களும் இங்கே கனியுதடா!

மணலும் இங்கே மணக்குதடா!



திருநெல்வேலி வந்து பாரு

திருப்பங்கள் உனக்கு உண்டு பாரு!


திருச்செந்தூர் முருகனடா

திருப்பங்கள் உனக்கு தருவானடா!


- முத்து துரை





பராசக்தி

வறுமைகள் போக்கியே!

வாழ வைப்பாயே! 

வாழ வைப்பாயே! 


சிறுமைகள் தளர்த்தியே! 

சிறப்புற செய்வாயே! செய்வாயே!


மரங்களும் வளர்ந்தது 

மலைகளும் செழித்தது 

மழைகளும் சிலிர்த்தது 

எல்லாம் உன்னாலே! உன்னாலே! 


ஞாலம் வளர்ந்தது

நாளும் உயர்ந்தது

ஞானம் பிறந்தது

நாயகி உந்தன் அன்பாலே! அன்பாலே!



என் தாயே! 

பராசக்தி நீயே!

ஆதி பராசக்தி நீயே!

காப்பாயே! எம்மை


கள்வம் நிறைந்தது

கர்வம் உயர்ந்தது

கடமை தளர்ந்தது

களையெடுக்க வருவாயோ!


தீமைகள் ஒழிந்திட

தீயதை களைந்திட

தீர்ப்புகள் தந்திட

அவதாரம் எடுப்பாயோ 

அவதாரம் எடுப்பாயோ !


எங்கள் தாயே!

பராசக்தி நீயே!

ஆதி பராசக்தி நீயே!

காப்பாயே! எம்மை


வறுமைகள் போக்கியே!

வாழ வைப்பாயே! 

வாழ வைப்பாயே! 


சிறுமைகள் தளர்த்தியே! 

சிறப்புற செய்வாயே! செய்வாயே!


- முத்து துரை











Saturday, 1 February 2025

நம்பிக்கை

ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே! 


ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!

நம்பிக்கை என்ற ஒன்றாலே! 

ஒவ்வொரு மனதுமே மலர்கிறதே! 

லட்சியம் என்ற ஒன்றாலே! 


அவமானங்கள் பல சந்தித்தும் 

கண்ணீர்கள் பல சிந்தித்தும்

வாழ்வது இந்த வாழ்க்கையே 

தேடுது அந்த வெற்றியே!


கல் ஒன்று தடுக்கிறது என்றால்

உளிக் கொண்டு சிலையாக்கு!

சொல் ஒன்று வதைக்கிறது என்றால்

உயர வேண்டும் உள்வாங்கு!


வெற்றியும், தோல்வியும் உன்னிடமே

அதன் மேல் கொண்ட காதல் சொல்லிடுமே!

வெற்றியோ! தோல்வியோ! முயன்று விடு

முடிவுகள் அதனிடமே கொடுத்து விடு!


பூக்கள் பூத்து உதிர்கிறது

அதன் பயனும் முடிகிறது

சருகாக காய்ந்த பின்னும்

உரமாக மாறுகிறது .....


தேனீக்கள் தேனை தான்

சிறுக சிறுக சேர்கிறது

ஏமாற்றம் தெரிந்தும் தான்

திரும்பத் திரும்ப முயற்சிக்கிறது....


மனமே! மனமே கொஞ்சம் நில்லு

கலங்காதே எல்லாம் உந்தன் கையில்


எறும்புகள் சோர்வதில்லை

இயற்கையும் வீழ்வதில்லை

மனம் மட்டும் ஏன் துடிக்கிறது

மலையோடு போராட வெறுக்கிறது


போராட்டம், போராட்டம் மட்டுமே என்று கலங்காதே

போராட்டம் முடிந்திடுமே!

முடிவுகள் ஒரு நாள் வரும் தளராதே!

உன்னோட விடியலாக அது மாறிடுமே!


மனமே! மனமே கொஞ்சம் நில்லு

கலங்காதே! கலங்காதே! எல்லாம் உந்தன் கையில்


ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!

நம்பிக்கை என்ற ஒன்றாலே! 

ஒவ்வொரு மனதுமே மலர்கிறதே! 

லட்சியம் என்ற ஒன்றாலே! 


- முத்து துரை






Wednesday, 29 January 2025

கிராமத்துப் பெண்கள்

தத்தி தாவுது நெஞ்சம்

நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி

தத்தி தாவுது நெஞ்சம்



இதழ்களில் வழிந்தோடும் கனிரசம்

இதமா மெல் இதமா 

வெளிவரும் பழரசம் - நா 

என்ற பழரசம்


பசைகள் ஏதும் தடவா 

பாலாடை மேனி

இரத்தினங்கள் சிந்திய இரத்தினம்

நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி நடைப்போடும்


தாவணி கனவுகள் பல கண்டு

தாவுது மனம் அவள் கண்டு

தத்தி தாவுது மனம் அவள் கண்டு.


துள்ளிடும் மீன்கள் 

அள்ளிடும் கண்கள் 

அவள் கண்கள் 


அகராதி தேடினேன்

ஒவிய பாவை - அவளை வர்ணிக்க

அகராதி தேடினேன் 

கிராமத்து பாவையே - உன்னை

வர்ணிக்க அகராதி தேடினேன்.


தத்தி தாவுது நெஞ்சம்

நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி

தத்தி தாவுது நெஞ்சம்


சந்தங்கள் பல சந்தங்கள் 

சடுகுடு செய்தது - அவளின் அழகை வருட 

சந்தங்கள் பல சந்தங்கள் 

சடுகுடு செய்தது


பாத பூஜைக்கு தவம் செய்யும்

பல வண்ண மலரும் - அவளின் 

படைப்பை ரசிக்க தன்னை கோர்தது 

கூந்தலில் வட்டமிட்ட மறு கணம் 

தன்னை அடிமையாக்கியது

கூந்தலின் மணத்தில் திளைத்து..


நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி

மேளங்களும், கானங்களும் 

மேலமிடுகிறது..


- முத்து துரை






















Sunday, 26 January 2025

ஆரிராரோ

தாய்மை தவம் மகளே!

தாயானதும் உணர்ந்தேன் மகளே!

உந்தன் தாயானதும் உணர்ந்தேன் மகளே!


போர்களங்களை பூக்களங்களாக்கி

வந்தாய் மகளே என்னுள் 

வந்தாய் மகளே!

காத்தேன் உன்னை 

காத்தேன் மகளே!


மாதங்கள்! பத்து மாதங்கள் 

உருண்டோடியது

உந்தன் அழுகுரலும், அழுகுரலும் 

ஆனந்தம் ஆனது!


மார்முட்டி, மார்முட்டி வளர்ந்தாய்

எந்தன் !

மார்முட்டி, மார்முட்டி வளர்ந்தாய் மகளே


தாய்மை தவம் மகளே!

தாயானதும் உணர்ந்தேன் மகளே!


சோதனை, சோதனை செய்தாய்

பலவாறு என்னை 

சோதனை செய்தாய் மகளே!

சகித்தேன், சகித்தேன் சகியே!

சகலமும் நீ என்று 

சகித்தேன் கண்ணே!


தோள் தாண்டி வளர்ந்தாய் மகளே! 

எந்தன் தோள் தாண்டி வளர்ந்தாய்!


தோழியாக ஆன மகளே! 

எந்தன் ஏற்றங்களும் மாற்றங்களும் 

உன்னால் மகளே!


- முத்து துரை









Friday, 24 January 2025

குறிஞ்சிக்கொடி

வேல் வேல் வேலவா!


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

உன்னை தேடி வளர்கிறது

குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.


முருகா! முருகா! 

ஓம் முருகா!


முல்லைத் தோட்டம் வைத்தேன்

முருகா! - உன் வாசம் மணக்க

முல்லைத் தோட்டம் வைத்தேன்.


கார்த்திகை மைந்தனே!

காதலால் தேடினேன்!

கருணை கொண்டவனே! 


கருத்தில் எடுப்பாயோ என்னை -உந்தன் 

கருத்தில் எடுப்பாயோ என்னை !


அரோகரா! அரோகரா!


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி 

இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.


பாலமுருகா! 

என்னைத் தேடி நீ வந்தாய்! 

பேதை நெஞ்சுக்கு தான் புரியவில்லை

என்னைத் தேடி வந்தாயே முருகா!


ஆறுமுகா ஆறுமுகா !


ஆதரவு தருவாயோ ஆறுமுகா

ஆர்ப்பாட்டம் இல்லாத 

அன்பை தான் தருவாயோ?


பேதமை செய்யாத வேலவா!

பக்கத்தில் உந்தன் பக்கத்தில்

எனக்கொரு இடம் தருவாயோ?


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி குறிஞ்சிக்கொடி வளர்கிறது.



-முத்து துரை










Tuesday, 21 January 2025

ஒரு தலை ராகம்!

ஒரு தலை ராகம் ஆனேன்!

ஓராயிரம் கவிதை வரைந்து

ஒன்னோட நினைப்பில் தவித்து

ஒரு தலை ராகமானேன்!


மோதிரம் மாத்த நினைத்தேன்

மோகத்தோடு வரைந்தேன்

காதலே! காதலே!


உசுரே உசுரே நீ தானே!

உள்ளம் எல்லாம் நீ தானே!

கேள்விகள் எல்லாம் நீ தானே

பதில்களும் நீதானே!


ஒரு தலை ராகம் நான் ஆனேன்

பெண்ணே! உன்னால் 

ஒரு தலை ராகம் நான் ஆனேன்..


முத்த மழை பொழிய நினைத்தேன்

என் முத்தங்களால் உன்னை நிரப்ப நினைத்தேன்.

காதலியே என் காதலியே!

காத்திருந்தேன் காதலியே!


உன் பாதங்களைத் தழுவி

மெட்டியிட நினைத்தேன்

காகித படங்களில் 

கானமிட இசைத்தேன்.


கனவுகள் பல கண்டேன் காதலியே!

நீ என் மனைவியாக

கனவுகள் பல கண்டேன் காதலியே!


காலங்கள் எல்லாம்

மறக்காது காதலியே

உன் மேல் நான் கொண்ட காதலை

என் காலங்கள் மறக்காது....


இன்று நீ இல்லை

இருந்தும்.....

உன்னோட நினைப்புல தவித்தேன்


ஒரு தலை ராகமானேன்

பெண்ணே!

ஒரு தலை ராகம் ஆனேன் ....


- முத்து துரை

Saturday, 18 January 2025

மாதவிடாய் !

மாதம் மாதம் விடாமல் 

துரத்தும் மாதவிடாயே!! .

ஐந்து நாளும் - உன் 

வலி வேதனை!


வருவதற்கு முன்னும் 

வந்த பின்னும் 

வலிகள் மட்டுமே! 


ஏன் 

இந்த கொடுமை அழுகிறேன்

கண்ணீர் கூட கரிசனம் காட்டும் 

மாதவிடாயே! - ஆனால்

உன் கரிசனம்?


நீ வந்தாலும் வேதனை 

வரவில்லையென்றாலும் வேதனை! 

மும்முறை முழ்கியும் 

தனியவில்லை உன் 

தணல் மட்டும்.


வேதனை மட்டும் தரும் 

வேதளாமே! - சீக்கிரம் 

வந்து விட்டு போ ! 


- முத்து துரை.





Tuesday, 14 January 2025

ஏறுபிடி

வீரா வீரா வீரா!

ஓடிவா, வீரா!


மஞ்சுவிரட்டும் வீரா!

உந்தன் 

வீரத்திற்கு ஈடா!

வீரத்திற்கு ஈடா!


வீரத்திற்கு வீரத்திற்கு 

ஈடோ! - உந்தன் 

வீரத்திற்கு தான் ஈடோ !


ஏறுபூட்டும் வீரா! 

ஏற்றமுடன் செல்வாயே! 

ஏறுபிடி வீரா!


விளையாட்டு விளையாட்டு இல்லை 

இது 

விளையாட்டு  விளையாட்டு இல்லை

வீரம் வீரம் என்று பறைசாற்றடா !

நீயும் பறைசாற்றடா!


வீரத்திற்கு வீரத்திற்கு 

ஈடோ! - உந்தன் 

வீரத்திற்கு தான் ஈடோ !


Friday, 10 January 2025

வேலவா!

வேலுடன் வீற்றிருக்கும்

வேலவா! 

கதிர்வேலவா!


காத்திருந்தேன் காத்திருந்தேன் உன்னை 

காணவே! காத்திருந்தேன்


சரணம் சரணம் சொல்லியே 

நான் தொழுதேன்

சரவணபவ சரவணபவ என்ற 

சரணம் சொல்லியே

நான் தொழுதேன்.


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


வேலுண்டு வினையில்லை முருகா 

உந்தன் வேலுண்டு 

எனக்கு வினையில்லை முருகா!


கந்தன் என்று சொன்னேன் 

காவலாய் 

எந்தன் காவலாய்

நீ நின்றாயே!


எண்ணினேன் எண்ணினேன் முருகா

எந்தன் எண்ணம் எல்லாம் 

எண்ணம் எல்லாம்

நீதான் முருகா!


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


அழகின் மறு உருவே வேலவா

அழகின் மறு உருவே வேலவா

அமிர்தமாய் அமிர்தமாய் வந்தாயே

எங்கள் வேலவா!


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


- முத்து துரை




வேறு இல்லை!

உன்

துணையன்றி துணையன்றி

வேறு இல்லை


தனி மரமாய் தனி மரமாய்

நானும் நின்றேன் -உன்

துணையன்றி துணையன்றி

வேறு இல்லை -என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


பார் புகழ வேண்டும் என்று

எண்ணினேனே!

ஆனால்

ஆசையினால், பேராசையினால்

சிந்தினேனே!

கண்ணீர் சிந்தினேனே!


என் உலகம் நீ என்று

நம்பினேனே

ஆனால்

எதிர்பார்ப்புகள் பொய் என்று

உணர்த்தினாயே! - என் 

எதிர்பார்ப்புகள் பொய் என்று

உணர்த்தினாயே!


என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


வயதான வாழைமரமாய்

நானும் ஆனேன் - என்

தைரியங்கள் தைரியங்கள்

வீழ்ந்ததுவே -உன்னால்

வீழ்ந்ததுவே!


ஆயிரம் உறவுகள் தாங்கும்

ஆலமரமாய் நானும் நின்றேன்

என் உணர்வுகளை தாங்க

வேறு இல்லை வேறு இல்லை

உன் துணையன்றி வேறு இல்லை


என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


- முத்து துரை










Wednesday, 8 January 2025

பெண்ணே!

என்னுள் முழுவதும் கரைந்தாயே!

ஆதி முதல் அந்தம் வரை 

நீ மட்டுமே!


என்னுள் முழுவதும் கரைந்தாய்

நீ தானே! பெண்ணே!


இதய அறைகள் நான்காம் 

அந்த நான்கிலும் உன் 

ஆதிக்கமே என்றால் 

உன் ஆதிக்கமே என்றால்

என் உதிரம் செல்வது எவ்விடம்?

எவ்விடம்?


தவிக்கும் உதிரத்திற்கு தெரியவில்லை - என்

இதயம் துடிப்பதே உன்னால் பெண்ணே!


என்னுள் முழுவதும் கரைந்தாய்

பெண்ணே!


நரம்புகள் துடிக்கின்றது

நரம்புகள் துடிக்கின்றது - பெண்ணே

உன் பெயரை உச்சரித்தபடியே

என் நரம்புகள் துடிக்கின்றது.


என் கண் என்ற குளத்திலே

என் கண் என்ற குளத்திலே

நீந்துகின்ற மீனானாய்

நீந்துகின்ற மீனானாய்

நீயானாய் பெண்ணே!


என்னுள் முழுவதும் கரைந்தாயே

கரைந்தாயே!


உயிரும் உன்னுடன் கலந்ததே

என் உயிரும் உன்னுடன் கலந்ததே!

உணர்வுகள் எல்லாம் 

நீயானாய் நீ யானாய்!


என் உலகம் முழுவதும் நீயானாய் 

உன்னில் நானும் கரைந்தேனே!

கரைந்தேனே! 


- முத்து துரை












தமிழே!

தரம் உயர்ந்தேன்

தரம் உயர்ந்தேன் - விதைப்போல்

தரம் உயர்ந்தேனே - உன்னால்

தரம் உயர்ந்தேனே!


தலைநிமிர்ந்தேன் 

தலைநிமிர்ந்தேன் 

தமிழே! - உன்னால் 

தலைநிமிர்ந்தேனே!


தழைத்தேன் தழைத்தேன் 

நெற்கதிர் போல் 

தழைத்தேன் - தமிழே!  உன்னால் 

தழைத்தேனே!


செழித்தேன் செழித்தேன் 

மழைகளில் நனைந்த 

நெற்கதிர்கள் போல் - உன்னால்

செழித்தேனே!


நாணினேன் நாணினேன்

வளர் நெற்கதிர்கள் 

நாணுவதைப் போல்

மகிழ்ச்சியால் - உன்னால் 

மகிழ்ச்சியால் நாணினேன்


நன்றி தமிழே! 

பயிர்கள் செழிப்பது போல் உன்னால் 

நானும் செழித்தேனே!


பொங்கல் பொங்கி 

வளம் பொழிவது போல்

தமிழே உன்னால் 

வளர்வேனே!


- முத்து துரை













Monday, 6 January 2025

என் மகள்

மகளே!  மகளே!

மறு உருவே! மறு உருவே! 

அன்னையின் மறு உருவே!

என் அன்னையின் மறு உருவே!


ஆறடி உயரமும் - என்

ஆண் மகன் கர்வமும் 

அடங்கி அடங்கி 

அமைதியானது - உன்

அன்பான பிஞ்சு விரல்களில் ...


அப்பா! அப்பா! 

அழகோடு நீ அழைத்தாய்

அழகோடு நீ அழைத்தாய்

அள்ளி தழுவினேனே! - உன்னை

அள்ளி தழுவினேனே!


தவழ்ந்தாய் தவழ்ந்தாய்

நீ தவழ்ந்தாய்

கம்பளமானேனே சிகப்பு 

கம்பளமானேனே ...


மகளே!  மகளே!

மறு உருவே! மறு உருவே! - என்

அன்னையின் மறு உருவே!


நடந்தாய் தத்தி நடந்தாய் 

நடை துணை நானானேன் - உன் 

நடை துணை நானானேன் - என் 

நுனி விரல் உன்னோடு! 


ஆயிரம் கதைகள் 

ஆயிரம் கதைகள் வடித்தேனே

ஆனந்தமாய் நீ துயில் கொள்ளவே!


மகளே! மகளே! - என்

அன்னையின் மறு உருவே!

வளர்ந்தாய்! வளர்ந்தாய்! 

உன்னுடன் நானும்

வளர்ந்தேன் 

குமரியாக நீயானாய் 

உன் குழந்தையாக நானானேன்.


தேவதையை! எந்தன் தேவதையை

கரம் பிடித்து கொடுத்தேன் 

கண்கள் முழுதும் நீரோடு 

 மனம்வாழ்த்தியதே! 

என் மனம் வாழ்த்தியதே! 


அன்பே அன்பே!

தேடுது எந்தன் கண்கள் 

வருவாயோ? இன்று 

வருவாயோ?


மகளே! மகளே! 

மறு உருவே - என்

அன்னையின் மறு உருவே!

Sunday, 5 January 2025

முருகைய்யா

சினம் கொடியது! கொடியது!

என்று காட்டிடவே 

சிரத்தோடு பழனி மலை சென்றாயோ?

குமரய்யா !


அவ்வை பாட்டி 

அழைப்பாள் என்று

அவ்விடம் சென்றாயோ?

முருகைய்யா!


சினம் தணிந்து

மனம் குளிர்ந்து

குணம் உயர

வைத்தாயோ? 

வர வைத்தாயோ?

பழனி மலைக்கு 


எங்கள் 

முருகைய்யா! 


கர்வம் கலைத்திடவே

மனிதம் கர்வம் கலைத்திடவே!

துறவம் புரிந்தாயோ?

துறவம் புரிந்தாயோ?

எங்கள்

வேலய்யா!!


- முத்து துரை







என் காதலே!

சிற்பிகள் செதுக்கிய

சிற்பம் போல்

அசைவன்றி நிற்கிறேன்

பெண்ணே! உன்னை கண்டதும் 

அசைவின்றி நிற்கின்றேன்.


மேகங்கள் கடலுடன்

கலப்பதுப் போல் - நான் 

உன்னுடன் கலந்துவிட்டேன்.


அலைகளில் நீந்தும் மீனைப்போல்

உன் கண் என்ற கடலில்  - நான்

விழுந்து நீந்துகின்றேன்.


உன்னை கண்டதும் - பெண்ணே

அசைவின்றி நிற்கிறேன்.


துணையை கண்டதும் 

சிலிர்க்கும் மயில்போல்

சிலிர்த்து விட்டேன்

உன்னை கண்டதும் 


ஓடையில் ஓடும் நீருடன் 

ஓடும் மணல் துகள்கள் போல் 

ஓடுகிறது என் மனம் உன்னுடன்.


உன்னை கண்ட முதல் பார்வையில்

என்னை நான் தொலைத்தேன்.

பெண்ணே!

என்னை நான் தொலைத்தேன்.


- முத்து துரை













Friday, 3 January 2025

விநாயகனே.

தோள் சேர் 

முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


துதித்தேன் துதித்தேன் 

உன்னை விநாயகனே!

துதிக்கையால் உன் 

துதிக்கையால் உயர்த்திய

தூயவனே!


அப்பமும் பொரியும் வைத்தேன்

அப்பனாய் அப்பனாய் - என்

அப்பனாய் என்னுடனே நடந்தவனே!


சுழியாய் சுழியாய்

பிள்ளையார் சுழியாய் வரைந்தேனே

சுழல்கள் என் சுழல்கள் 

அனைத்தையும் கலைந்தவனே!


எங்கும் எங்கும் உன்

திருநாமங்கள் முதலில்

இசைக்கும் இசைக்கும் - உன்

திருநாமங்கள்


முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


வினைகள், வினைகள் 

எனகில்லை விநாயகனே

நின்னை

நான் சரணடைந்தேன் 

வினைகள் வினைகள்

எனகில்லை!


என் ஆரம்பம் ஆரம்பம்

நீதானே! - விநாயகனே!

என் விநாயகனே! 

என் இறுதிவரை காத்திடும்

என் விநாயகனே!


அப்பமும் பொரியும் வைத்தேன்

அப்பனாய் அப்பனாய் - என்

அப்பனாய் என்னுடனே நடந்தவனே!


முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


- முத்து துரை












Thursday, 2 January 2025

பொன்னே! பொன்னே!

பொன்னே! பொன்னே! 

மின்னும் பொன்னே!

காண்பவர் கண்ணை 

கவரும் பொன்னே! - என் 

கண்மணியே! - என்

காதலியே!


பொன்னே! பொன்னே! 

கதிரவன் போல்

மின்னும் பொன்னே! 

என் கண்மணியே!


அழகின் வடிவம் பொன்னே!

அன்பாய் அரவணைக்கும் முன்னே - உன்

பார்வையால் கொள்ளும் கண்ணே !


முகிலின் வடிவம் பொன்னே!

பரிசமாய் வருடும் முன்னே - உன்

பார்வையால் கொள்ளும் கண்ணே !

என் கண்மணியே!


பொன்னே! பொன்னே!

மின்னும் பொன்னே !

என் கண்மணியே!


காவியமாய் வந்தாய் பொன்னே! - என்

கனவிலும் நீ தான் பொன்னே!

கற்பனையில் வரைந்தேன் உன்னை

கரம்பிடித்திடவே!


உரிமை தந்தாய்  பொன்னே - என்

உணர்விலும் நீ தான் பொன்னே!

கவிதைகளால் வடித்தேன் உன்னை

மணந்திடவே !


பொன்னே! பொன்னே!

மின்னும் பொன்னே !

என் கண்மணியே!

காதலியே!


காத்திருப்பேன் உன்னை சூடிடவே 

காத்திருப்பேன் - என் 

காலம் உள்ளவரை உன்னுடன் 

வாழ்ந்திடவே!


காணிக்கையாய் எனை தந்து

காதலியாய் உனை 

கைகளில் ஏந்தினேன்!

காலம் உள்ளவரை உன்னுடன் 

வாழ்ந்திடவே!


பொன்னே! பொன்னே! 

மின்னும் பொன்னே!

என் கண்மணியே!

என் காதலியே!


- முத்து துரை










Wednesday, 1 January 2025

தங்கம்

ஜொலிக்கும் ஜொலிக்கும் 

தங்கமே! 

எனை ஈர்ப்பது ஈர்ப்பது ஏனோ?


ஹா ஹா ஹா என் தோற்றம் அப்படித்தான்..


பொலிவுடன் பொலிவுடன்

புன்னகைத்து எனை 

இழுப்பது  இழுப்பது ஏனோ?


ம்ம்... ம்ம்... ஈர்க்கும் வலிமை அப்படித்தான்.


பொக்கிஷம்! பொக்கிஷம்!

நீ என்னுடன் வருவதால்

இனபுரியா ஆனந்தம் ஏனோ?

பாதுகாப்பு நீ 

பரிசமாக நீ

பரிவுடன் உனை வருடினேன்.


ஹா ஹா ஹா நான் தான்

நான் தான்

நானே தான்!


தங்கமே! தங்கமே!

இன்னும் கொஞ்சம் இரு

இன்னும் கொஞ்சம் இரு


உன் அடமானம் நான் தானே

நான் சென்று வருகிறேனே!


பொன்னே! பொன்னே!

பிறரிடம் இருந்தால் 

பொறாமை வருவது ஏனோ?


ம்ம்... உன் ஆழ்மனதில் 

என் இடம் ஆழம் அதனால்!


- முத்து துரை








சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...