Tuesday, 10 October 2017

என் முன்னாள் காதலி


இடிகளின் இச்சையில் உடைந்திட்ட 
பனை மரம் போல் - உடைந்த 
என் நெஞ்சம் - மறக்க செய்கிறது 
குழந்தை சிரிப்புப் போல் மலர்கிற 
உன் நினைவு சுமைகள்..... 

ஆர்ப்பரிக்கும் அலைக்கடலை ஆரவாரம் செய்யும் 
அந்தி மாலை பொழுது போல் 
அழகிய காட்சிகள் நிறைந்த என் உலகம் 
நிறங்களற்ற காட்சியாய் என்னை மட்டும் சுமந்து செல்கிறது..... 
நீ கொண்ட பிரிவால்..... 

யாரும் எனை பார்க்கவிலைல - ஆனால் 
உலகமே என்னிடம் எதோ சொல்வது போல் 
ஒரு மாயை என்னுள்.... உன் 
சோகங்களை உதிர்த்து செல்வதால்..... 

தனியாக பேசுவதால் பைத்தியம் என்கிறது 
அவர்களுக்கு புரியவில்லை 
உன்னுடன் உரையாடுகிறேன் என்று!!!!! 

என் எண்ணமாக, செயலாக இருந்தாய் - இன்று 
என்னோடு நீ இல்லை 
எங்கிருந்தாலும் நலமாக வாழ்வாய் 
என் முன்னாள் காதலியே!!!!! 

-மூ.முத்துச்செல்வி

1 comment:

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...