கண்மாயில் கால்
நனைத்து கேலி
செய்த நாட்கள்...
ஆற்று மணலில்
ஒய்யார இருக்கையில்
ஓலம் இட்ட நாட்கள்
மழை வெள்ளத்தில்
படகு போட்டி
வைத்திட்ட நாட்கள்...
பனை பழத்தில்
பகுசாய் வண்டி ஒட்டி
சண்டையிட்ட நாட்கள்...
கண்கட்டி
தெரு வீதியில்
ஓடிட்ட நாட்கள்....
பட்டம் பறக்க
வானம் சொந்தமாகிய
நாட்கள்...
கொடை பலூன்
பத்து அடி
வாங்கிய நாட்கள்...
அழகு கண்ணாடி
அணிந்து வீதியில்
சண்டியராய்
அலைந்திட்ட நாட்கள்...
திரும்பி பார்க்க
துடிக்கும் நாட்கள்
இக்கால பிள்ளைக்கு
கிடைத்திடா நாட்கள்.....
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment