Monday, 9 October 2017

உள்ளும் புறமும் நீ




வெண்ணிலவாய் வீதியில் 
வட்டமிட்டு சென்றாய்.... 

வெள்ளந்தியாய் உள் 
இருப்பதாய் சொல்லாமல் 
உன் வரவை ரசித்து 
நின்றேன்..... 

துள்ளும் மீனாய் 
கடை வீதியில் 
அவள்..... 

தத்தளிக்கும் 
தண்ணீரற்ற பறவையாய் 
நான்..... 

மண்ணிலிருந்து 
எழுந்த விதையாய் 
உன்னிலிருந்து 
விளைந்த மரமாய் 
உன் நினைவுகள்.... 

அலையாய் 
அசைந்தோடும் 
உன் நினைவு கவிதைகள்..... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...