Monday, 9 October 2017

இன்று ஒரு நாள் மட்டும்


என்றோ ஓர் நாள்!!!! 
முடியும் வாழ்க்கை 
இன்று ஓர் நாள்- மட்டும் 
உன்னுடன் தொடங்காதா........... 


என்றோ ஓர் நாள்!!!! 
நிற்கும் கால்கள் 
இன்று ஓர் நாள்- மட்டும் 
உன்னுடன் பயணிக்காதா....... 

என்றோ ஓர் நாள்!!!! 
உட் புகா சுவாசம் 
இன்று ஓர் நாள்- மட்டும் 
உன் சுவாசத்தை சுவாசிக்காதா!!!!!! 

என்றோ ஓர் நாள்!!!! 
வரையா கைகள் 
இன்று ஓர் நாள்- மட்டும் 
உன் உருவம் வரையாதா!!!! 

என்றோ ஓர் நாள்!!!! 
இமைக்கா கண்கள் 
இன்று ஓர் நாள்- மட்டும் 
உன் உருவத்தை சிமிட்டாதா......... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...