Tuesday, 10 October 2017

சோளக்காட்டு பொம்மை



சுடுவானின் சூரியன் 
சுடும் நடுவெளியில் நடுமரமாய்.... 

கருவாச்சியை விரட்ட 
அருவாச்சியாய் வைக்கோலுடன்.... 

பானை மண்டையுடன் 
பகட்டு தோற்றம்.... 

ஜோடி இல்லா நாயகனாய் 
தனி நடனம்.... 

எந்த பாவி பெற்ற சாபமோ! 
கைகள் விரிதிட்டபடி 
பகலும் இரவும்.... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...