Wednesday, 13 November 2019

எனக்கு கொடுத்தாய்

கம்பன் படித்தேன்
கற்பனை உணர்ந்தேன்...

ஒளவையை படித்தேன்
ஒழுக்கம் வளர்த்தேன்...

வள்ளுவன் உணர்ந்தேன்
வாழ்க்கை அறிந்தேன்...

மூலர் அறிந்தேன்
மூலமும் தெரிந்தேன்...

நால்வர் அறிந்தேன்
நல்வழி நடந்தேன்...

அனைத்தும் அறிந்தேன்
அன்பனே உன் அன்பினால்...

எனக்கு கொடுத்தாய்
என்னை செதுக்கினாய்...

கணவனே காதலை கொடுத்தாய்
நான் என்னை கொடுத்தேன்...

- முத்து துரை

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...