Saturday, 20 September 2025

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய்

நான் தடுமாறி நின்றேன் ஓஹோ!



முள்ளின் மீது

பனிகள் விழுந்து மோதுகின்றதே

பனியின் காதல்

முள்ளின் காதில் கேட்கவில்லையோ?



பாறை மீது கிளைகள் முளைக்கும் நேரமானதே

ஓஹோ!


கிளையின் காதல்

பாறையின் காதில் கேட்கவில்லையோ?



ஓஹோ!!!!


எந்தன் காதல்

நானும் சொல்லி 

நாட்கள் ஆனதே!


ஓஹோ!!!


உந்தன் காதில் 

எந்தன் காதல்

கேட்கவில்லையோ?



குயிலின் ஓசை கேட்டும் கேட்டும்

திரும்பவில்லையே!



ஓ  ஹோ!!.....


உந்தன் ஓசை கேட்ட உடனே

திரும்புகின்றதே!


ஓஹோ ஓஹோ

தலை கோத வந்தாய்

தடு மாறி நின்றேன்!



நானும் இன்று

தடம் மாறி நின்றேன்.



தலை கோத வந்தாய்

ஓஹோ!.....


- முத்து துரை 

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...