தனிமை எனக்கொன்றும் புதிதில்லை
இருந்தும் - உறவே
உன் பிரிவு எனக்கு புதிதே!......
பிரிவில் நிலைக்கொள்கிறது
காதலே
நம் காதல்......
தனிமை எனக்கொன்றும் பயமில்லை
இருந்தும் - உயிரே
நீயில்லா வெறுமை பயமே!......
பிம்ப துகளே நீ சிந்திய
பிம்பத்தில் தெரிகிறது
என் பிம்பம்.....
தனிமை எனக்கொன்றும் சுகமில்லை
இருந்தும் - பரிவே
உன் நினைவுகள் சுகமே!.....
தனிமை சுகம் ரனமாய் தாக்க
அன்பே!
கூட்டத்திலும் தனித்திருக்கிறேன்......
தனிமை எனக்கொன்றும் வலியல்ல
இருந்தும் - மெய்யே
உன் வருடல் தரா தனிமை வலியே!......
என் குழந்தை மனமும் அழுகிறது
பசிக்காக அல்ல - உன்
பாசத்துக்காக.......
தனிமை எனக்கொன்றும் பாரமல்ல
இருந்தும் - அழகே
உன் வரவுக்காக காத்திருக்கும் நாட்கள் பாரமே!....
விழித்திருந்தும் விடியவில்லை
என் இரவு மட்டும்......
இப்பொழுதும் சொல்கிறேன்
தனிமை எனக்கொன்றும் புதிதில்லை
இருந்தும் புதிதே!.
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment