Tuesday, 10 October 2017

தனிமை எனக்கொன்றும் புதிதில்லை




தனிமை எனக்கொன்றும் புதிதில்லை 
இருந்தும் - உறவே 
உன் பிரிவு எனக்கு புதிதே!...... 

பிரிவில் நிலைக்கொள்கிறது 
காதலே 
நம் காதல்...... 

தனிமை எனக்கொன்றும் பயமில்லை 
இருந்தும் - உயிரே 
நீயில்லா வெறுமை பயமே!...... 

பிம்ப துகளே நீ சிந்திய 
பிம்பத்தில் தெரிகிறது 
என் பிம்பம்..... 

தனிமை எனக்கொன்றும் சுகமில்லை 
இருந்தும் - பரிவே 
உன் நினைவுகள் சுகமே!..... 

தனிமை சுகம் ரனமாய் தாக்க 
அன்பே! 
கூட்டத்திலும் தனித்திருக்கிறேன்...... 

தனிமை எனக்கொன்றும் வலியல்ல 
இருந்தும் - மெய்யே 
உன் வருடல் தரா தனிமை வலியே!...... 

என் குழந்தை மனமும் அழுகிறது 
பசிக்காக அல்ல - உன் 
பாசத்துக்காக....... 

தனிமை எனக்கொன்றும் பாரமல்ல 
இருந்தும் - அழகே 
உன் வரவுக்காக காத்திருக்கும் நாட்கள் பாரமே!.... 

விழித்திருந்தும் விடியவில்லை 
என் இரவு மட்டும்...... 

இப்பொழுதும் சொல்கிறேன் 
தனிமை எனக்கொன்றும் புதிதில்லை 
இருந்தும் புதிதே!. 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...