கண்ணதாசன் மது கிண்ணத்தில்
வழிந்திட்ட போதை வரிகள்
அவள் கரு விழி கண்கள்..........
வாலி வரைந்திட வரிகளின்
முகபொழிவு வெயிலில்
மின்னும் அவளின் முகம்...........
வைரமுத்து வடித்திட்ட
வரிகளில் - அவரின்
ஒரு வரி இருமுறை உச்சரிப்பு ஈர்ப்பு
அவளின் முனுமுனு பேச்சி.........
அப்துல் ரகுமான் செதுக்கிய
பால்வீதி
விரிந்தோடும் -அவள்
கூந்தல்........
ஜெயகாந்தன், ஜெயமோகன்
கதை தொகுப்பில் வரும்
சினுங்கல் -அவள்
காலின் கொலுசு..........
கல்கி செதுக்கிய வரிகள்
ஈர்க்கும் கவனம்
அவளின் கை மொழி அசைவு.......
பாரதி தாங்கிய
வீர வரியில் உள்ள
புதுமை பெண்ணும்
இவள்தானோ!!! -தாயாய்
அவளின் தைரியம்.......
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment