Monday, 9 October 2017

சாதாரண காதலன்


மலை அழகில் வளர்ந்திட காதல் 
மழை பொய்த்தாலும் மாறா காதல் 
மழை நேரம் உன் உடல் அழகை கண்டு 
மனம் மறந்த காதல் - என்னவளே 
உன் முகம் சுருங்க நான் வாடிய நேரம் 
உன் வருடும் தென்றலில் எனை பூக்க செய்த காதல் 
மொழிகள் தேவையில்லா காதலில் 
நீயும், நானும் பயணிக்கும் காதல் 
பசுமையில் மலர்ந்திட்ட காதல் 
பருவங்கள் மாறியும் மாறா காதல் 

காதலில் கரைந்து நாம் சென்ற பயணம்தான் 
என் வாழ்வின் வரலாறு 
உன் நோயுற்ற மேனியை நோக்க 
எனக்கு திராணியில்லை 
உன்னை வாழ வைக்க 
எனையும் மாய்த்து கொள்கிற காதல் 
நாம் இணைத்திடுவோம் என்ற நம்பிக்கையில்...... 
விவசாயியான என் காதலை புரிவாய் 
என் காதலி பூமியே!!!! 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...