Monday, 9 October 2017

நினைவுகள் நிலையில்லா மனம்



முள்ளின் மீது 
வரைந்திட்ட 
சேலை வடிவமைப்பு 
கந்தலான என் காதல்.... 

வார்ப்புகளில் வடிந்தோடும் 
தங்க கொப்பளிப்பு 
உன் நினைவில் 
என் மனம்.... 

நதிகள் எதிர்கொள்ளா 
காகித ஓடம் 
நட்ட நடு மழையில் 
நாசமாய் போன 
என் காதல்... 

உணர்வற்ற சடமாய் 
உயிருள்ள பிணமாய் 
உருகிதான் போனது 
உருக்குலைந்த மனம்... 

ஓரப்பர்வையில் விழ்ந்திட்டு 
ஓரமாய் 
ஒப்பாரி வைக்கிறது 
ஒற்றை மனம்... 

உரசும் காற்று கூட 
உறையும் குளிராய் 
உன் நினைவில் 
உடைந்திட்ட மனம்.... 

சீப்பின் பற்கள் கூட 
கிழிக்கின்றது தேகத்தை 
தனிமை தரும் வலியால்... 

சல சல என வீசும் காற்றும் 
சல்லடை ஆனது 
சர சர என வரும் நினைவால்... 

மழை பெய்யும் வேளை 
கலைந்திட்ட மேகமாய் 
அவளின்றி கலையும் 
என் நேசம்.... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...