Tuesday, 10 October 2017

இதுதான்

இதுதான்
விவேகமாய் வீறுடன் 
விதையாய் எழு என்றான் 
அன்றைய கவிஞனும், சமூகமும்..... 

விடாமல் குடி என்கிறது 
இன்றைய சமூகம்...... 

தண்ணீர்! தண்ணீர்! 
என்கிறது ஒரு தேசம் 
அதன் தேவைக்காய்.... 

நீ குடி குடி! 
என்கிறது ஒரு தேசம் 
அதன் கஜானா கட்ட.... 

இளம் வயதில் 
இயலாமை, துன்பத்தை வெளிபடுத்த 
குடி தான் தீர்வு 
சித்தரிக்கிறது திரையோவியம்!! 

தன் மகிழ்ச்சியை வெளிபடுத்த 
உயர்தர, பளிச்சிடும் விளக்குடன் கூடிய 
விருந்திற்கு செல் என்கிறது ஊடகம்!! 

இளம் வயதினர்க்கு 
இப்படியா வழிகாட்ட வேண்டும் 

இதற்க்கு மட்டும் ஏன் இல்லை 
சட்டங்களும், கட்டுபாடும்....... 

இதுமட்டும் தான் உலகமா??? 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...