Tuesday, 10 October 2017

மேக விடு தூது


மேக விடு தூது


உன் கைகளை பிடித்து வெகுதூரம் நடந்திடவில்லை 
மழை மேகங்களில் உன் தோள் உரசி சரிந்ததுமில்லை 
நான் காணும் அனைவரும் காதல் மழையில் 
கைகள் கோர்த்து நடந்திட - நான் மட்டும் தனிமையில் 
மழை மேகங்களில் குடையின் கைகளை கோர்த்து நடந்திட்டேன்! 
விடியும் பொழுதெல்லாம் உன் முகம் பார்க்கவில்லை 
உன் விடுமுறை வரவை மட்டும் நோக்கி விடியும் விழிகள் 
பூக்களை கோர்த்து என் கூந்தலில் நீ சூட்ட 
கூந்தலின் கருமையும் உன் வரவை நோக்கி..... 
நான் பேசும் கொஞ்சலும் நீ பேசும் மென்மையும் 
கடிதங்களின் வார்த்தைகளில் மட்டும் விரிகிறது.... 
மேகத்திடம் தூது செல்ல மனமும் மறந்ததில்லை 
உன் தோளில் நம் குழந்தை உறங்கிடவில்லை 
உன் மார்பில் நாங்கள் இருவரும் தவழ்ந்திடவுமில்லை 
ஆனாலும் உன் மார்பயும், தோளையும் சூழ்ந்தது 
நீ செய்யும் கடமை எங்களை காக்க.... 
ஏக்கங்கள் நிறைந்தாலும் தூக்கங்கள் தொலைந்தாலும் 
உன் மடிமீது தவழும் நாள்கள் வரவை எண்ண தவறியதுமில்லை 
மேகமே உன் மழையுடன் உரைத்திடு என் அன்பானவனிடம் 
என் உயிர் சுமர்ந்த உன் வருகைக்கு காத்திருக்கிறேன் என்று.... 
காதலனாய் நீ இருந்திடவில்லை - ஆனாலும் 
நல் காவலனாய் எங்கள் பாதுகாவலனாய் இம்மண்ணில்
உலக மக்கள் மனதில் பூக்கள் என்ற அன்பு மலர்ந்தால் 
நீயும் நானும் வாழ்வோம் மற்ற காதலரை போல் உலகில்.... 
இதையும் கூறிவிட்டு போ மேகமே! 
இவுலக மக்களுக்கு போர்க்களங்கள் வேண்டாமென்று....... 

----------------------------------------------------------------------------------------------- 

ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு சமர்ப்பணம்........ 

- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...