Monday, 9 October 2017

என் மறுபிறவியும் நீயே வேண்டும்


நிழலாய் உன் நிழலாய் 
தொடர்வேன் உன்னை.... 

மழையாய் சிறு மழையாய் 
பொழிவேன் உன்னில்..... 

மலராய் சிறு மலராய் 
மலர்வேன் உன் கண்ணில்.... 

நிஜமாய் நிஜமாய் 
உன் அன்பு ஒன்றே போதும் 
என் வாழ்வில்..... 

காற்றாய் வீசும் காற்றாய் 
உன்னுள் விழுவேன்..... 

தாயே என் தாயே! 
உன் மடி தரும் சுகம் 
வேண்டும் 
என் ஏழு பிறவியும்....... 

உன்னை உன்னை 
பிரிய என்னுள் நிலநடுக்கம் 
வேண்டாம் வேண்டாம் 
இந்த பிரிவு.... 

என் வாழ்வில் 
வேண்டாம் இன்னோரு 
பந்தம்.... 
மகளாய் உன் மகளாய் 
என் வாழ்நாள் வரை 
இருக்க வேண்டும்..... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...