Monday, 9 October 2017

என் மறுபிறவியும் நீயே வேண்டும்


நிழலாய் உன் நிழலாய் 
தொடர்வேன் உன்னை.... 

மழையாய் சிறு மழையாய் 
பொழிவேன் உன்னில்..... 

மலராய் சிறு மலராய் 
மலர்வேன் உன் கண்ணில்.... 

நிஜமாய் நிஜமாய் 
உன் அன்பு ஒன்றே போதும் 
என் வாழ்வில்..... 

காற்றாய் வீசும் காற்றாய் 
உன்னுள் விழுவேன்..... 

தாயே என் தாயே! 
உன் மடி தரும் சுகம் 
வேண்டும் 
என் ஏழு பிறவியும்....... 

உன்னை உன்னை 
பிரிய என்னுள் நிலநடுக்கம் 
வேண்டாம் வேண்டாம் 
இந்த பிரிவு.... 

என் வாழ்வில் 
வேண்டாம் இன்னோரு 
பந்தம்.... 
மகளாய் உன் மகளாய் 
என் வாழ்நாள் வரை 
இருக்க வேண்டும்..... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...