
கருவறையின் சுகம் மட்டும்
கண்டாய் வாழ்வில்
கல்லறைக்கூட கலங்கும் - உன்
காய்ச்சிய கை கண்டு.......
நெருப்பில் சுட்ட இரும்பாய்
தினம் தினம் அகதியாய்
கனவுகள் பல சுமந்து......
கார்மேக கண்களில் கண்ணீரை சுமந்து
செம்பட்டை முடியுடன் வீதியில்.........
ஓலம் இடும் ஈக்கள் கூட
தன் சிறகை விரித்து சுதந்திரமாய் பூமியில்
சிறகொடிந்த பறவை நீ
சிறகிரிந்தும் பறக்க இயலவில்லை......
செங்கற்கள் இடையில் சிக்கிய
செந்தாமரை - வழிந்து ஓடும்
உன் குருதி அதில் சிவந்த
செங்கற்கள்......
அய்யன் பட்ட கடன் தீர்க்க
அடகுவைத்தாய் உன் இளமையை
தியாகியாய் நீ சிந்தும் இரத்தம்
பறைசாற்றும் உன் அன்னையின் துயரை........
மனிதம் மலர்கிறது!!!!!! - நீ
ஒட்டிய சுவரொட்டி வேதனையில்
அவையும் கிழிந்தது உன் நிலை கண்டு......
-மூ.முத்துச்செல்வி
-----------------------------------------------------------------------------------------------
குழந்தை தொழிலாளி இல்லா
தேசம் மலர இக் கவிதை சமர்ப்பணம்
கண்டாய் வாழ்வில்
கல்லறைக்கூட கலங்கும் - உன்
காய்ச்சிய கை கண்டு.......
நெருப்பில் சுட்ட இரும்பாய்
தினம் தினம் அகதியாய்
கனவுகள் பல சுமந்து......
கார்மேக கண்களில் கண்ணீரை சுமந்து
செம்பட்டை முடியுடன் வீதியில்.........
ஓலம் இடும் ஈக்கள் கூட
தன் சிறகை விரித்து சுதந்திரமாய் பூமியில்
சிறகொடிந்த பறவை நீ
சிறகிரிந்தும் பறக்க இயலவில்லை......
செங்கற்கள் இடையில் சிக்கிய
செந்தாமரை - வழிந்து ஓடும்
உன் குருதி அதில் சிவந்த
செங்கற்கள்......
அய்யன் பட்ட கடன் தீர்க்க
அடகுவைத்தாய் உன் இளமையை
தியாகியாய் நீ சிந்தும் இரத்தம்
பறைசாற்றும் உன் அன்னையின் துயரை........
மனிதம் மலர்கிறது!!!!!! - நீ
ஒட்டிய சுவரொட்டி வேதனையில்
அவையும் கிழிந்தது உன் நிலை கண்டு......
-மூ.முத்துச்செல்வி
-----------------------------------------------------------------------------------------------
குழந்தை தொழிலாளி இல்லா
தேசம் மலர இக் கவிதை சமர்ப்பணம்
No comments:
Post a Comment