தோள் சேர்
முதல்வனே! முதல்வனே!
என் விநாயகனே!
துதித்தேன் துதித்தேன்
உன்னை விநாயகனே!
துதிக்கையால் உன்
துதிக்கையால் உயர்த்திய
தூயவனே!
அப்பமும் பொரியும் வைத்தேன்
அப்பனாய் அப்பனாய் - என்
அப்பனாய் என்னுடனே நடந்தவனே!
சுழியாய் சுழியாய்
பிள்ளையார் சுழியாய் வரைந்தேனே
சுழல்கள் என் சுழல்கள்
அனைத்தையும் கலைந்தவனே!
எங்கும் எங்கும் உன்
திருநாமங்கள் முதலில்
இசைக்கும் இசைக்கும் - உன்
திருநாமங்கள்
முதல்வனே! முதல்வனே!
என் விநாயகனே!
வினைகள், வினைகள்
எனகில்லை விநாயகனே
நின்னை
நான் சரணடைந்தேன்
வினைகள் வினைகள்
எனகில்லை!
என் ஆரம்பம் ஆரம்பம்
நீதானே! - விநாயகனே!
என் விநாயகனே!
என் இறுதிவரை காத்திடும்
என் விநாயகனே!
அப்பமும் பொரியும் வைத்தேன்
அப்பனாய் அப்பனாய் - என்
அப்பனாய் என்னுடனே நடந்தவனே!
முதல்வனே! முதல்வனே!
என் விநாயகனே!
- முத்து துரை
No comments:
Post a Comment