Friday, 3 January 2025

விநாயகனே.

தோள் சேர் 

முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


துதித்தேன் துதித்தேன் 

உன்னை விநாயகனே!

துதிக்கையால் உன் 

துதிக்கையால் உயர்த்திய

தூயவனே!


அப்பமும் பொரியும் வைத்தேன்

அப்பனாய் அப்பனாய் - என்

அப்பனாய் என்னுடனே நடந்தவனே!


சுழியாய் சுழியாய்

பிள்ளையார் சுழியாய் வரைந்தேனே

சுழல்கள் என் சுழல்கள் 

அனைத்தையும் கலைந்தவனே!


எங்கும் எங்கும் உன்

திருநாமங்கள் முதலில்

இசைக்கும் இசைக்கும் - உன்

திருநாமங்கள்


முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


வினைகள், வினைகள் 

எனகில்லை விநாயகனே

நின்னை

நான் சரணடைந்தேன் 

வினைகள் வினைகள்

எனகில்லை!


என் ஆரம்பம் ஆரம்பம்

நீதானே! - விநாயகனே!

என் விநாயகனே! 

என் இறுதிவரை காத்திடும்

என் விநாயகனே!


அப்பமும் பொரியும் வைத்தேன்

அப்பனாய் அப்பனாய் - என்

அப்பனாய் என்னுடனே நடந்தவனே!


முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


- முத்து துரை












No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...