சினம் கொடியது! கொடியது!
என்று காட்டிடவே
சிரத்தோடு பழனி மலை சென்றாயோ?
குமரய்யா !
அவ்வை பாட்டி
அழைப்பாள் என்று
அவ்விடம் சென்றாயோ?
முருகைய்யா!
சினம் தணிந்து
மனம் குளிர்ந்து
குணம் உயர
வைத்தாயோ?
வர வைத்தாயோ?
பழனி மலைக்கு
எங்கள்
முருகைய்யா!
கர்வம் கலைத்திடவே
மனிதம் கர்வம் கலைத்திடவே!
துறவம் புரிந்தாயோ?
துறவம் புரிந்தாயோ?
எங்கள்
வேலய்யா!!
- முத்து துரை
No comments:
Post a Comment