மாதம் மாதம் விடாமல்
துரத்தும் மாதவிடாயே!! .
ஐந்து நாளும் - உன்
வலி வேதனை!
வருவதற்கு முன்னும்
வந்த பின்னும்
வலிகள் மட்டுமே!
ஏன்
இந்த கொடுமை அழுகிறேன்
கண்ணீர் கூட கரிசனம் காட்டும்
மாதவிடாயே! - ஆனால்
உன் கரிசனம்?
நீ வந்தாலும் வேதனை
வரவில்லையென்றாலும் வேதனை!
மும்முறை முழ்கியும்
தனியவில்லை உன்
தணல் மட்டும்.
வேதனை மட்டும் தரும்
வேதளாமே! - சீக்கிரம்
வந்து விட்டு போ !
- முத்து துரை.
No comments:
Post a Comment