Saturday, 18 January 2025

மாதவிடாய் !

மாதம் மாதம் விடாமல் 

துரத்தும் மாதவிடாயே!! .

ஐந்து நாளும் - உன் 

வலி வேதனை!


வருவதற்கு முன்னும் 

வந்த பின்னும் 

வலிகள் மட்டுமே! 


ஏன் 

இந்த கொடுமை அழுகிறேன்

கண்ணீர் கூட கரிசனம் காட்டும் 

மாதவிடாயே! - ஆனால்

உன் கரிசனம்?


நீ வந்தாலும் வேதனை 

வரவில்லையென்றாலும் வேதனை! 

மும்முறை முழ்கியும் 

தனியவில்லை உன் 

தணல் மட்டும்.


வேதனை மட்டும் தரும் 

வேதளாமே! - சீக்கிரம் 

வந்து விட்டு போ ! 


- முத்து துரை.





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...