என்னுள் முழுவதும் கரைந்தாயே!
ஆதி முதல் அந்தம் வரை
நீ மட்டுமே!
என்னுள் முழுவதும் கரைந்தாய்
நீ தானே! பெண்ணே!
இதய அறைகள் நான்காம்
அந்த நான்கிலும் உன்
ஆதிக்கமே என்றால்
உன் ஆதிக்கமே என்றால்
என் உதிரம் செல்வது எவ்விடம்?
எவ்விடம்?
தவிக்கும் உதிரத்திற்கு தெரியவில்லை - என்
இதயம் துடிப்பதே உன்னால் பெண்ணே!
என்னுள் முழுவதும் கரைந்தாய்
பெண்ணே!
நரம்புகள் துடிக்கின்றது
நரம்புகள் துடிக்கின்றது - பெண்ணே
உன் பெயரை உச்சரித்தபடியே
என் நரம்புகள் துடிக்கின்றது.
என் கண் என்ற குளத்திலே
என் கண் என்ற குளத்திலே
நீந்துகின்ற மீனானாய்
நீந்துகின்ற மீனானாய்
நீயானாய் பெண்ணே!
என்னுள் முழுவதும் கரைந்தாயே
கரைந்தாயே!
உயிரும் உன்னுடன் கலந்ததே
என் உயிரும் உன்னுடன் கலந்ததே!
உணர்வுகள் எல்லாம்
நீயானாய் நீ யானாய்!
என் உலகம் முழுவதும் நீயானாய்
உன்னில் நானும் கரைந்தேனே!
கரைந்தேனே!
- முத்து துரை
No comments:
Post a Comment