Wednesday, 8 January 2025

தமிழே!

தரம் உயர்ந்தேன்

தரம் உயர்ந்தேன் - விதைப்போல்

தரம் உயர்ந்தேனே - உன்னால்

தரம் உயர்ந்தேனே!


தலைநிமிர்ந்தேன் 

தலைநிமிர்ந்தேன் 

தமிழே! - உன்னால் 

தலைநிமிர்ந்தேனே!


தழைத்தேன் தழைத்தேன் 

நெற்கதிர் போல் 

தழைத்தேன் - தமிழே!  உன்னால் 

தழைத்தேனே!


செழித்தேன் செழித்தேன் 

மழைகளில் நனைந்த 

நெற்கதிர்கள் போல் - உன்னால்

செழித்தேனே!


நாணினேன் நாணினேன்

வளர் நெற்கதிர்கள் 

நாணுவதைப் போல்

மகிழ்ச்சியால் - உன்னால் 

மகிழ்ச்சியால் நாணினேன்


நன்றி தமிழே! 

பயிர்கள் செழிப்பது போல் உன்னால் 

நானும் செழித்தேனே!


பொங்கல் பொங்கி 

வளம் பொழிவது போல்

தமிழே உன்னால் 

வளர்வேனே!


- முத்து துரை













No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...