தரம் உயர்ந்தேன்
தரம் உயர்ந்தேன் - விதைப்போல்
தரம் உயர்ந்தேனே - உன்னால்
தரம் உயர்ந்தேனே!
தலைநிமிர்ந்தேன்
தலைநிமிர்ந்தேன்
தமிழே! - உன்னால்
தலைநிமிர்ந்தேனே!
தழைத்தேன் தழைத்தேன்
நெற்கதிர் போல்
தழைத்தேன் - தமிழே! உன்னால்
தழைத்தேனே!
செழித்தேன் செழித்தேன்
மழைகளில் நனைந்த
நெற்கதிர்கள் போல் - உன்னால்
செழித்தேனே!
நாணினேன் நாணினேன்
வளர் நெற்கதிர்கள்
நாணுவதைப் போல்
மகிழ்ச்சியால் - உன்னால்
மகிழ்ச்சியால் நாணினேன்
நன்றி தமிழே!
பயிர்கள் செழிப்பது போல் உன்னால்
நானும் செழித்தேனே!
பொங்கல் பொங்கி
வளம் பொழிவது போல்
தமிழே உன்னால்
வளர்வேனே!
- முத்து துரை
No comments:
Post a Comment