Friday, 10 January 2025

வேறு இல்லை!

உன்

துணையன்றி துணையன்றி

வேறு இல்லை


தனி மரமாய் தனி மரமாய்

நானும் நின்றேன் -உன்

துணையன்றி துணையன்றி

வேறு இல்லை -என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


பார் புகழ வேண்டும் என்று

எண்ணினேனே!

ஆனால்

ஆசையினால், பேராசையினால்

சிந்தினேனே!

கண்ணீர் சிந்தினேனே!


என் உலகம் நீ என்று

நம்பினேனே

ஆனால்

எதிர்பார்ப்புகள் பொய் என்று

உணர்த்தினாயே! - என் 

எதிர்பார்ப்புகள் பொய் என்று

உணர்த்தினாயே!


என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


வயதான வாழைமரமாய்

நானும் ஆனேன் - என்

தைரியங்கள் தைரியங்கள்

வீழ்ந்ததுவே -உன்னால்

வீழ்ந்ததுவே!


ஆயிரம் உறவுகள் தாங்கும்

ஆலமரமாய் நானும் நின்றேன்

என் உணர்வுகளை தாங்க

வேறு இல்லை வேறு இல்லை

உன் துணையன்றி வேறு இல்லை


என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


- முத்து துரை










No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...