உன்
துணையன்றி துணையன்றி
வேறு இல்லை
தனி மரமாய் தனி மரமாய்
நானும் நின்றேன் -உன்
துணையன்றி துணையன்றி
வேறு இல்லை -என் துணையே
உன் துணையன்றி
வேறு இல்லை!
பார் புகழ வேண்டும் என்று
எண்ணினேனே!
ஆனால்
ஆசையினால், பேராசையினால்
சிந்தினேனே!
கண்ணீர் சிந்தினேனே!
என் உலகம் நீ என்று
நம்பினேனே
ஆனால்
எதிர்பார்ப்புகள் பொய் என்று
உணர்த்தினாயே! - என்
எதிர்பார்ப்புகள் பொய் என்று
உணர்த்தினாயே!
என் துணையே
உன் துணையன்றி
வேறு இல்லை!
வயதான வாழைமரமாய்
நானும் ஆனேன் - என்
தைரியங்கள் தைரியங்கள்
வீழ்ந்ததுவே -உன்னால்
வீழ்ந்ததுவே!
ஆயிரம் உறவுகள் தாங்கும்
ஆலமரமாய் நானும் நின்றேன்
என் உணர்வுகளை தாங்க
வேறு இல்லை வேறு இல்லை
உன் துணையன்றி வேறு இல்லை
என் துணையே
உன் துணையன்றி
வேறு இல்லை!
- முத்து துரை
No comments:
Post a Comment