Sunday, 26 January 2025

ஆரிராரோ

தாய்மை தவம் மகளே!

தாயானதும் உணர்ந்தேன் மகளே!

உந்தன் தாயானதும் உணர்ந்தேன் மகளே!


போர்களங்களை பூக்களங்களாக்கி

வந்தாய் மகளே என்னுள் 

வந்தாய் மகளே!

காத்தேன் உன்னை 

காத்தேன் மகளே!


மாதங்கள்! பத்து மாதங்கள் 

உருண்டோடியது

உந்தன் அழுகுரலும், அழுகுரலும் 

ஆனந்தம் ஆனது!


மார்முட்டி, மார்முட்டி வளர்ந்தாய்

எந்தன் !

மார்முட்டி, மார்முட்டி வளர்ந்தாய் மகளே


தாய்மை தவம் மகளே!

தாயானதும் உணர்ந்தேன் மகளே!


சோதனை, சோதனை செய்தாய்

பலவாறு என்னை 

சோதனை செய்தாய் மகளே!

சகித்தேன், சகித்தேன் சகியே!

சகலமும் நீ என்று 

சகித்தேன் கண்ணே!


தோள் தாண்டி வளர்ந்தாய் மகளே! 

எந்தன் தோள் தாண்டி வளர்ந்தாய்!


தோழியாக ஆன மகளே! 

எந்தன் ஏற்றங்களும் மாற்றங்களும் 

உன்னால் மகளே!


- முத்து துரை









No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...