Tuesday, 21 January 2025

ஒரு தலை ராகம்!

ஒரு தலை ராகம் ஆனேன்!

ஓராயிரம் கவிதை வரைந்து

ஒன்னோட நினைப்பில் தவித்து

ஒரு தலை ராகமானேன்!


மோதிரம் மாத்த நினைத்தேன்

மோகத்தோடு வரைந்தேன்

காதலே! காதலே!


உசுரே உசுரே நீ தானே!

உள்ளம் எல்லாம் நீ தானே!

கேள்விகள் எல்லாம் நீ தானே

பதில்களும் நீதானே!


ஒரு தலை ராகம் நான் ஆனேன்

பெண்ணே! உன்னால் 

ஒரு தலை ராகம் நான் ஆனேன்..


முத்த மழை பொழிய நினைத்தேன்

என் முத்தங்களால் உன்னை நிரப்ப நினைத்தேன்.

காதலியே என் காதலியே!

காத்திருந்தேன் காதலியே!


உன் பாதங்களைத் தழுவி

மெட்டியிட நினைத்தேன்

காகித படங்களில் 

கானமிட இசைத்தேன்.


கனவுகள் பல கண்டேன் காதலியே!

நீ என் மனைவியாக

கனவுகள் பல கண்டேன் காதலியே!


காலங்கள் எல்லாம்

மறக்காது காதலியே

உன் மேல் நான் கொண்ட காதலை

என் காலங்கள் மறக்காது....


இன்று நீ இல்லை

இருந்தும்.....

உன்னோட நினைப்புல தவித்தேன்


ஒரு தலை ராகமானேன்

பெண்ணே!

ஒரு தலை ராகம் ஆனேன் ....


- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...