Friday, 24 January 2025

குறிஞ்சிக்கொடி

வேல் வேல் வேலவா!


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

உன்னை தேடி வளர்கிறது

குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.


முருகா! முருகா! 

ஓம் முருகா!


முல்லைத் தோட்டம் வைத்தேன்

முருகா! - உன் வாசம் மணக்க

முல்லைத் தோட்டம் வைத்தேன்.


கார்த்திகை மைந்தனே!

காதலால் தேடினேன்!

கருணை கொண்டவனே! 


கருத்தில் எடுப்பாயோ என்னை -உந்தன் 

கருத்தில் எடுப்பாயோ என்னை !


அரோகரா! அரோகரா!


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி 

இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.


பாலமுருகா! 

என்னைத் தேடி நீ வந்தாய்! 

பேதை நெஞ்சுக்கு தான் புரியவில்லை

என்னைத் தேடி வந்தாயே முருகா!


ஆறுமுகா ஆறுமுகா !


ஆதரவு தருவாயோ ஆறுமுகா

ஆர்ப்பாட்டம் இல்லாத 

அன்பை தான் தருவாயோ?


பேதமை செய்யாத வேலவா!

பக்கத்தில் உந்தன் பக்கத்தில்

எனக்கொரு இடம் தருவாயோ?


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி குறிஞ்சிக்கொடி வளர்கிறது.



-முத்து துரை










No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...