Thursday, 2 January 2025

பொன்னே! பொன்னே!

பொன்னே! பொன்னே! 

மின்னும் பொன்னே!

காண்பவர் கண்ணை 

கவரும் பொன்னே! - என் 

கண்மணியே! - என்

காதலியே!


பொன்னே! பொன்னே! 

கதிரவன் போல்

மின்னும் பொன்னே! 

என் கண்மணியே!


அழகின் வடிவம் பொன்னே!

அன்பாய் அரவணைக்கும் முன்னே - உன்

பார்வையால் கொள்ளும் கண்ணே !


முகிலின் வடிவம் பொன்னே!

பரிசமாய் வருடும் முன்னே - உன்

பார்வையால் கொள்ளும் கண்ணே !

என் கண்மணியே!


பொன்னே! பொன்னே!

மின்னும் பொன்னே !

என் கண்மணியே!


காவியமாய் வந்தாய் பொன்னே! - என்

கனவிலும் நீ தான் பொன்னே!

கற்பனையில் வரைந்தேன் உன்னை

கரம்பிடித்திடவே!


உரிமை தந்தாய்  பொன்னே - என்

உணர்விலும் நீ தான் பொன்னே!

கவிதைகளால் வடித்தேன் உன்னை

மணந்திடவே !


பொன்னே! பொன்னே!

மின்னும் பொன்னே !

என் கண்மணியே!

காதலியே!


காத்திருப்பேன் உன்னை சூடிடவே 

காத்திருப்பேன் - என் 

காலம் உள்ளவரை உன்னுடன் 

வாழ்ந்திடவே!


காணிக்கையாய் எனை தந்து

காதலியாய் உனை 

கைகளில் ஏந்தினேன்!

காலம் உள்ளவரை உன்னுடன் 

வாழ்ந்திடவே!


பொன்னே! பொன்னே! 

மின்னும் பொன்னே!

என் கண்மணியே!

என் காதலியே!


- முத்து துரை










No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...