சிற்பிகள் செதுக்கிய
சிற்பம் போல்
அசைவன்றி நிற்கிறேன்
பெண்ணே! உன்னை கண்டதும்
அசைவின்றி நிற்கின்றேன்.
மேகங்கள் கடலுடன்
கலப்பதுப் போல் - நான்
உன்னுடன் கலந்துவிட்டேன்.
அலைகளில் நீந்தும் மீனைப்போல்
உன் கண் என்ற கடலில் - நான்
விழுந்து நீந்துகின்றேன்.
உன்னை கண்டதும் - பெண்ணே
அசைவின்றி நிற்கிறேன்.
துணையை கண்டதும்
சிலிர்க்கும் மயில்போல்
சிலிர்த்து விட்டேன்
உன்னை கண்டதும்
ஓடையில் ஓடும் நீருடன்
ஓடும் மணல் துகள்கள் போல்
ஓடுகிறது என் மனம் உன்னுடன்.
உன்னை கண்ட முதல் பார்வையில்
என்னை நான் தொலைத்தேன்.
பெண்ணே!
என்னை நான் தொலைத்தேன்.
- முத்து துரை
No comments:
Post a Comment