Friday, 10 January 2025

வேலவா!

வேலுடன் வீற்றிருக்கும்

வேலவா! 

கதிர்வேலவா!


காத்திருந்தேன் காத்திருந்தேன் உன்னை 

காணவே! காத்திருந்தேன்


சரணம் சரணம் சொல்லியே 

நான் தொழுதேன்

சரவணபவ சரவணபவ என்ற 

சரணம் சொல்லியே

நான் தொழுதேன்.


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


வேலுண்டு வினையில்லை முருகா 

உந்தன் வேலுண்டு 

எனக்கு வினையில்லை முருகா!


கந்தன் என்று சொன்னேன் 

காவலாய் 

எந்தன் காவலாய்

நீ நின்றாயே!


எண்ணினேன் எண்ணினேன் முருகா

எந்தன் எண்ணம் எல்லாம் 

எண்ணம் எல்லாம்

நீதான் முருகா!


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


அழகின் மறு உருவே வேலவா

அழகின் மறு உருவே வேலவா

அமிர்தமாய் அமிர்தமாய் வந்தாயே

எங்கள் வேலவா!


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


- முத்து துரை




No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...