ஜொலிக்கும் ஜொலிக்கும்
தங்கமே!
எனை ஈர்ப்பது ஈர்ப்பது ஏனோ?
ஹா ஹா ஹா என் தோற்றம் அப்படித்தான்..
பொலிவுடன் பொலிவுடன்
புன்னகைத்து எனை
இழுப்பது இழுப்பது ஏனோ?
ம்ம்... ம்ம்... ஈர்க்கும் வலிமை அப்படித்தான்.
பொக்கிஷம்! பொக்கிஷம்!
நீ என்னுடன் வருவதால்
இனபுரியா ஆனந்தம் ஏனோ?
பாதுகாப்பு நீ
பரிசமாக நீ
பரிவுடன் உனை வருடினேன்.
ஹா ஹா ஹா நான் தான்
நான் தான்
நானே தான்!
தங்கமே! தங்கமே!
இன்னும் கொஞ்சம் இரு
இன்னும் கொஞ்சம் இரு
உன் அடமானம் நான் தானே
நான் சென்று வருகிறேனே!
பொன்னே! பொன்னே!
பிறரிடம் இருந்தால்
பொறாமை வருவது ஏனோ?
ம்ம்... உன் ஆழ்மனதில்
என் இடம் ஆழம் அதனால்!
- முத்து துரை
No comments:
Post a Comment