ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோம்ஹூம் ஹூம்ம்ம் ம்ஹூம்
காதலில் நானும் விழுந்தேனோ!
விழுந்தேனோ!
கரைகளை நானும் அடைவேனோ!
அடைவேனோ!
உன் கைகளை நெருங்கவே
என் கைகள் ஏங்குதம்மா!
பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!
மழையின் மென்மை
வருடும் முன்னே
வெயிலின் தாக்கம் தொடங்கியதே!
காதலின் மென்மை தொடங்கும் முன்னே
பிரிவின் தாக்கம் சூழ்ந்ததம்மா!
நிலவை நான் பிடிக்க முயலும் முன்னே
எதிரில் நீ வந்து நின்றாய்
கடலை நான் கடக்கும் முன்னே
கரையாய் என் முன்னே நீ வந்தாய்
ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
உன் கைகளை நெருங்கவே
என் கைகள் ஏங்குதம்மா!
பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!
மழலை மொழிகள் புரிவதில்லை
அன்னை தவிர அறிவதில்லை
நான் பேசும் மொழிகள்
புரிவதில்லை
உன்னை தவிர
உன்னை தவிர
பழங்களின் சுவைகள்
மறைவதில்லை
நாவிற்கு மீண்டும் கேட்கிறதே!
உன்னுடைய நினைவும்
மறப்பதில்லை
திரும்ப திரும்ப
மலர்கிறதே!
மலர்கிறதே!
வேர்களை விட்டு
வீழ்ந்தாலும்
மரங்களை வேர்கள்
வெறுப்பதில்லை
என்னை விட்டு
போனாலும்
உந்தன் நினைவு
வெறுப்பதில்லை!
வெறுப்பதில்லை!
ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
காதலில் நானும் விழுந்தேனோ!
விழுந்தேனோ!
கரைகளை நானும் அடைவேனோ!
அடைவேனோ!
உன் கைகளை நெருங்கவே
என் கைகள் ஏங்குதம்மா!
பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!
- முத்து துரை
No comments:
Post a Comment