பக்கா அழகுல
பக்குவமா என்ன
சாட்சி சாட்சிபுட்டியே!
அத்தமவளே
அழகா நீயும்
பொறந்துபுட்டியே!
அழகா பொறந்துபுட்டியே!
மாமங்காரன் நான்
முற மாமங்காரன் நான்
மயங்கிபுட்டேனே! -உன் அழகுல
மயங்கிபுட்டேனே!
பக்கா அழகுல
என்ன என்ன
நீயும்
சாட்சிபுட்டியே!
கண்ணாடி வளவில
கட்டங்கட்டி என்ன
கட்டிப்புட்டியே!
கருமையை தடவி
கருவிழியால்
கவுத்துபுட்டியே!
கண்டாங்கி புடவை
கட்டி கட்டி
இழுத்துபுட்டியே!
மாமன் நானும் தான்
மாட்டிகிட்டேனே!
உன் அழகுல
மாட்டிகிட்டேனே!
பக்கா அழகுல
பக்கா அழகுல!!
- முத்து துரை
No comments:
Post a Comment