காதலை தந்திடும் காதலன்
நான் இங்கே - என்
காதலி நீ எங்கே?
பிரிவு ஒன்று வந்ததால்
பிரிந்தது இந்த உறவும் தான்
என் ஆணவமா? - இல்லை
உன் ஆணவமா?
எது பிரித்தது நம் காதலை !
நீ இன்றி நான் இல்லை
புரிந்தது இப்பொழுது ......
வருவாய் எந்தன் காதலே !
என் காதலி நீ எங்கே?
நீ!!! எங்கே?
இரவில்லா பகலாக !
நீயில்லா நானாக!
மழையில்லா பயிராக
நீயில்லா நானாக!
உயிரில்லா உடலாக
நீயில்லா நானாக!
உயிரே! ..........வருவாய்!
என் காதலே வருவாய்!
- முத்து துரை
No comments:
Post a Comment