Saturday, 14 June 2025

அப்பா!


என் புள்ள நீ 

சுகமா வளர .....

என் உதிரம் நான் கொடுப்பேன்!



உயிராய் வந்தாய் 

உறவை தந்தாய்  - புது

உறவை தந்தாய்!


உன்னை முதலில் பார்த்தவன் நானே!

என் மூச்சி வரை - இறுதி

மூச்சி வரை காப்பேனே!......


 நீ மெத்தையில தூங்க கண்ணே!

தாங்கும் தரையாய் மாறினேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....




 ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.........


தாய் தந்த உடல் தானே

நான் தந்த உயிர் தானே

உன்னையும், தாயையும் காப்பேனே 

உயிரே..............


மார் மேல் உதைத்தாய்

மன்னிப்பேனே!


நீ செய்த தவறுகளும்

மன்னிப்பேனே!


பேசாமல் நகர்ந்த நாட்களையும்

மன்னிப்பேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....


ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்........


என்றும் 

புரிவதில்லை என் பாசம் !



- முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...