Thursday, 26 October 2017

பெண்ணும் ஆணும்

பெண்ணும் ஆணும்
மலைகளின் செறிவில் இருந்து 
பெற்ற வீரம் ஆண் எனில் 
மலைகளையும் பாசத்தினால் கட்டிய நீர்வீழ்ச்சி 
மல்லிகை மனம் பொருந்தியவள் பெண் 
பெண்ணும் ஆணும் உடம்பில் சமமில்லை 
ஆனால் உள்ளத்தால் சமம்தான் 
பெண்ணிற்கென்று ஒரு சுதந்திர உலகம் உண்டு 
ஆணுக்கென்று ஒரு சுதந்திர உலகம் உண்டு 
ஆணின் சுதந்திரத்தை பாதிக்காத பெண்ணும் 
பெண்ணின் சுதந்திரத்தை பாதிக்காத ஆணும் 
என்றும் சமமே இந்த உலகில்...... 
பெண்ணை சமாக நினைக்க வேண்டும் என்றால் 
ஆணுக்குள் பெண்மை மலர வேண்டும் 
உள்ளத்தால் மட்டுமே சமத்துவம் மலரும் 
சமத்துவம் மலர்ந்தால் பெண்மையும் கவுரப்படும்!!! 
பெண் கொடுமையும் தடைபடும்!. 
இனி வரும் தலைமுறைக்கு போதியுங்கள் 
பெண்மையில் மீதியே ஆண்மை என்று 
ஆண் என்றும் பெண்ணின் மறுபிறவி என்று 
ஆணும், பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்றென்று 
அ என்ற குறில் இருந்துதான் 
ஆ என்ற நெடில் தோன்றியது என்று 
பெண்ணை மதித்து சமமாக பார்த்து 
மலரட்டும் அடுத்த தலைமுறை 

-மூ.முத்துச்செல்வி

3 comments:

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...