Sunday, 5 November 2017

கிராமம் நகரமானால்












கிராமம் நகரமானால்!!! 
பல தலைமுறை பண்பாடு 
பாழ்படும் 

அன்று 
விவசாய பள்ளிகள் 
இன்று 
பூமித்துளையிடும் கருவிகள்.... 

காற்று தரும் சுகம் - அதை ரசித்து 
மழைதுளியும் முத்தமிடும் 
பூமியை -இன்று 
மழையும் பயம் கொள்கிறது 
எம் நிலத்தின் நிலை கண்டு.. 

மாதம் மாரி எட்டிப்பார்க்க 
விதைதான் விவசாயத்தை.. 
மாரியும் பொய்த்து - கலப்பை ஏந்திய 
மனிதனும் போகிறான்.... 

நகர வீதிதோறும் மருத்துவம் 
கிராம பாட்டியின் -கை 
மருத்துவத்திற்கு ஈடில்லை 

வடக்கு வளர 
தெற்கு சுருங்குகிறது 
நாகரிக வளர்ச்சிக்கு 
பழி 
கிராமம்!!! 

நகரம் கிராமமானால் 
செயற்கை கோளும் செய்யும் 
விவசாயம்.... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...