Monday, 6 November 2017

அன்னைக்கு ஒரு கவிதை



வேந்தன் நுந்தை பெற்ற
அலகிலா வனப்பு 
எந்தை ஞால துணைவி 
பண் போற்றும் மதுரம் 
அடவி சூழ்ந்த உள்ளும் 
அடங்கும் உன் முன்
அழகிய பூ திரளாய் 
மழலை சினம்  
மலரொத்த மனம் 
கவிஞர்கள் உலாவித் 
திரட்டிய காவிய
முழு அகராதி என் முன்...
எந்தைப் பெற்ற வரம் 
எம்மவர் செய்த தவம்  
இரவியிடம் இறைஞ்சி 
யான் பெற்ற பொற்கிழி
இருட்சி நீக்க வந்த 
இறைவி யே!
ஞாயும் போற்றும் 
எம் யாய் யே!...

-மூ.முத்துச்செல்வி 



No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...