Friday, 24 November 2017

வாடா மகனே வா


மரக் கன்னு நா வைத்தேன் 
மகனே நீ விளையாட!! 

துள்ளி நீ ஆட 
துடிக்குது தாய் உள்ளம்!! 

தோள் சாய 
தோழனே நீ வாடா!! 

பறவை கானப் பொழுதில் 
கேள்விகள் நீ கேட்டிட வாடா!! 

பருவம் நான் அடைந்தும் 
பழுக்காத என் - பனிக்குடம் 
நிரப்பிட வாடா!! 

பேறு நான் பெற 
மன்னவனே வாடா!! 

உள்ளக்குமுறல் நீக்கிட 
உள்ளம் மகிழ வாடா!! 

வெள்ளமாய் நான் 
கண்ணீர் வடித்தாலும் 
தெப்பமாய் நீ மிதக்க வாடா!! 

தூக்கி சுமக்க கை துடிக்கிது 
சீக்கிரம் வாடா செல்லமே!! 

ஊரு வாய் அடைக்க 
உத்தமனே நீ வாடா!! 

போற்றட்டும் உலகம் 
உன்னை பெற்ற என்னை.. 

உலகம் நீ வெல்ல 
உறுதுணை நான் இருப்பேன்.. 

ஏக்கம் நிறைந்து கோருகிறேன் 
வந்துவிடடா - உன் 
அன்னையிடம்... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...