
வீழ்கின்ற போது தோள் தாங்கியவள்
நா தழும்ப என் பெயர் உச்சரித்தவள்
சுட்டு விரல் பிடித்து முன்னே நடந்தவள்
ஜனனம், மரணம் கற்பித்தவள்
கண்ணீர் துளியின் ரணம் தந்தவள்
மழலை சின அழகு தரித்தவள்
தலையணை ஈரம் ஊட்டியவள்
நீள்கின்ற பாத பின்னலை காண்பித்தவள்
குடை சாரல் மழையில் நனைத்தவள்
சுகமும், சோகமும் ஒருசேர கலந்தவள்
தோள்களில் தலையணை பின்னியவள்
மடியில் என் தலை பாரம் தூக்கியவள்
நிலவொளியில் கனவில் வந்தவள்
இன்று இல்லை
என் அருகில்......
- மூ.முத்துச்செல்வி
நா தழும்ப என் பெயர் உச்சரித்தவள்
சுட்டு விரல் பிடித்து முன்னே நடந்தவள்
ஜனனம், மரணம் கற்பித்தவள்
கண்ணீர் துளியின் ரணம் தந்தவள்
மழலை சின அழகு தரித்தவள்
தலையணை ஈரம் ஊட்டியவள்
நீள்கின்ற பாத பின்னலை காண்பித்தவள்
குடை சாரல் மழையில் நனைத்தவள்
சுகமும், சோகமும் ஒருசேர கலந்தவள்
தோள்களில் தலையணை பின்னியவள்
மடியில் என் தலை பாரம் தூக்கியவள்
நிலவொளியில் கனவில் வந்தவள்
இன்று இல்லை
என் அருகில்......
- மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment