Thursday, 16 November 2017

எது மெய்யோ




பனிக்குடம் உடைந்து 
வந்த மெய்... 
மண்குடம் உடைந்துப் 
போகிற மெய்.. 

வருகைக்கு இரு கை 
துணை... 
முடிவிற்கு நான்கு கை 
துணை... 

எதுவும் மெய் 
இல்லை.... 
எதுவும் நிலை 
இல்லை.... 

இதுதான் 
இயற்கையெனில் 
எதுதான் 
மெய்யோ???? 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...