Thursday, 16 November 2017

என்னவள் முன்



மழை அழகு காண 
குடை விரிக்கும் 
மழை காளான் - என்னவள் 
குடை விரிப்பின் முன் 
தோற்றுப்போகும்.... 

நாதம் இசைக்கும் 
இசைச்சுருள் -என்னவள் 
பாத கொலுசு முன் 
தோற்றுப்போகும்.... 

சிற்பியின் கையில் உதிர்த்த 
சிற்ப மெல்லிடை - என்னவள் 
பளிங்கு இடையின் முன் 
தோற்றுப்போகும்.... 

கூந்தல் விரித்த கரிய 
கார்மேகம் - என்னவள் 
கூந்தல் அலையின் முன் 
தோற்றுப்போகும்.... 

அவளின் பாசத்திற்கு முன் 
அனைத்தும் 
தோற்றுப்போகும்... 

- மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...