Thursday, 16 November 2017

என்னவள் முன்



மழை அழகு காண 
குடை விரிக்கும் 
மழை காளான் - என்னவள் 
குடை விரிப்பின் முன் 
தோற்றுப்போகும்.... 

நாதம் இசைக்கும் 
இசைச்சுருள் -என்னவள் 
பாத கொலுசு முன் 
தோற்றுப்போகும்.... 

சிற்பியின் கையில் உதிர்த்த 
சிற்ப மெல்லிடை - என்னவள் 
பளிங்கு இடையின் முன் 
தோற்றுப்போகும்.... 

கூந்தல் விரித்த கரிய 
கார்மேகம் - என்னவள் 
கூந்தல் அலையின் முன் 
தோற்றுப்போகும்.... 

அவளின் பாசத்திற்கு முன் 
அனைத்தும் 
தோற்றுப்போகும்... 

- மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...