Thursday, 16 November 2017

தமிழ்

கூரிய வாள் கொண்டு 
வெட்டினாலும் - எங்கள் 
கேடயம் ஒன்றே!! 

தேகம் வேறுபட்டாலும் 
போற்றுகின்ற - எங்கள் 
சரணம் ஒன்றே!! 

கலைகள் பல 
நிகழ்ந்தாலும் - எங்கள் 
ஆரம்பம் ஒன்றே!! 

பல்வகை மொழி 
பயின்றாலும் - எங்கள் 
ஆதி ஒன்றே!! 

போர்கள் பல 
புரிந்தாலும் - எங்கள் 
வேட்கை ஒன்றே!! 

வேதங்கள் பல 
பெருகினாலும் - எங்கள் 
உயிர் மெய் என்றும் ஒன்றே!! 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...