Friday, 24 November 2017

மனதில் நீ


தேடி தேடி தேய்கிறேன் 
நீயும் நானும் சந்திகும்வேளையை.... 
உன் முகம் காணும் நேரத்திற்காக 
என் இமைகள் துடிக்கின்றன..... 

அன்பே! 
நீ அருந்தி உதிரும் - ஒற்றை 
துளி தண்ணீர்க்காக 
தாகத்தில் தவிக்கிறது என் நா.... 

நீயும் நானும் பேசிக்கொள்ளும் 
வார்த்தைக்களுக்காக ஏங்குகிறது 
என் வார்த்தைகள்..... 

பெண்ணே! 
என் மனதில் நீ இருக்கும் வரையில் 
நீ வேறு நான் வேறு என்ற 
எண்ணம் மட்டும் தோன்றுவதில்லை.... 

என் நாட்காட்டி 
தன் நாட்களை
 குறைகிறது 
உன்னை நான் பார்க்கின்ற நாளுக்காக..... 

விரைவில் சந்திப்போமா!..... 
என் மனதில் உள்ள கேள்விகளுடன் 
என் நிமிடங்கள்........ 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...