Thursday, 9 November 2017

பெண் விடுதலை


பெண் விடுதலை

பண்பாடு பாரதம் சொல்லி 
பாகுபடுத்திய தேசம் 
பண் பாடி வளர்கிறது 
பகுத்தறிவு தேசம் 

அடுக்களை அறை மட்டும் சொந்தம் 
அடையாளம் தெரியா தேசம் 
அமைதிக்கு குரல் கொடுத்து 
அகிலம் தெரிந்த தேசம் 

அண்ணாந்து பார்த்து வானம் 
அளவறிந்த உலகம் 
ஆகாச ரதம் அதில் ஏறி - வானம் 
அளக்கும் தேசம் 

ஆணுக்கு நிகர் பெண் 
சொல்லாதே மனிதா!! 
பெண்ணுக்கு நிகர் ஆண் இல்லை 
சான்று உன் அன்னை போதும்.... 

கடவுளின் சக்தி 
ஆன்மாவின் கரு 
பனிக்குடம் சுமந்து 
பக்குவம் பார்த்தவள் 

பாரதி கண்ட பெண்மை 
அடிமை நிலை மாறியும் 
இன்றும் கிடைக்கவில்லை 
பெண் விடுதலை !!! 

பேருந்தில் உரசியும் 
காம பார்வை வீசியும் 
தனிமைப் படுத்தும் மனிதா 
மாற வேண்டியது உன் மனமே!! 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...