Sunday, 5 November 2017

முழுமதி பார்வை

உன் விரல் மொட்டாட 

ஓடிய மேகமும் கூடிட 
சுட்ட நெருப்பில் சுகம் காண 
பிறை நிலா மேக அலையில் நீந்திட 
உன் பாத சுவடோசை 
வசந்தமாய் உன் வருகை 

முழுமதி என்னை கடந்திட 
மொழிகள் புதிராக 
உளறல் செவி எட்ட 
காத்திருக்கிறேன் மீண்டும் 
முழுமதி காண.. 

மேகமாய் நீ ஓடிட 
வானமாய் நான் ஓய்ந்திட 
அடுத்த கணம் எனதில்லை 
அடுத்த நொடி எனதில்லை - இருந்தும் 
கால் கடுக்க காத்திருப்பு... 

பின்னிக் கொண்ட கால்கள் 
நான்கும் பிரிந்தோட 
விழிநீரும் வழிந்தோட 
கரைரெண்டும் பிரிய 
கண்ணீர் நடுவே ஓடிட 

எனக்கில்லை என்றே உணர்ந்தும் 
மனம் மட்டும் உன்னை சுற்றும் 
கரடு முரடாய் நானிருந்தும் 
கனி சுளை என்னுள் நீ!! 

கவிதை வரிகள் சொல்லும் - உன் 
நினைவின் வலிகள்.. 
உன் குரல் அருகில் இல்லை 
என் வரிகள் வாசிக்க.. 

ஓரக்கண் பார்வை 
உதடோரம் சிறு புன்னகை 
மது வேண்டாம் - உன் 
விரலிடை மரணம் போதும் 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...