Sunday, 26 November 2017

அறம்

அறம்


தாயின் கருவறை 
கண்ட என் தேகம்! 
கண்ணீரிலும் ஈரமில்லா 
பூமி தாய் கால் மடியில் 
அகப்பட்டு... 

உன் கண்ணீரை 
உறிஞ்சிய மூடன் 
உன் மேனி காயத்தை 
குணப்படுத்த வில்லை 
விளைவு - என் 
பச்சிளம் தேகம் 
பரிதவிக்கிறது உன்னுள்.... 

பார்ப்பவை எல்லாம் தனதாக்கி 
கொள்ளும் கயவனே - பார் 
நான் படும் வேதனையை... 

உங்கள் அலட்சியத்திற்கு 
அவசரமாய் போகுது 
எங்கள் உயிர்... 

தேகம் சுருங்கி போனது 
நா வறண்டு போனது 
கண் இமைகள் மூடி போனது 
வாழ்வும் தூரம் போனது 
எங்கள் உயிர் தூசுதானே 
என் செய்ய 
ஏழைகள் தானே நாங்கள்... 

உங்கள் பிழைகள் 
மறந்து போகும் 
மறைந்து போகும் 
என் செய்ய 
ஏழைகள் தானே நாங்கள்... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...