Monday, 30 December 2024

முருகா!

அருவாய்! உருவாய்! 

நீ நின்றாய் 


ஆறுதல் நான் தேடினேன்

அடைக்கலம் நீ தந்தாய்

ஆலயம் தான் நுழைத்தேன்

அரவணைப்பை நீ தந்தாய்.


அருவாய்! உருவாய்!

நீ நின்றாய் - முருகா முருகா


ஆரவாரமோடு நான் தொழுதேன்

அழகா ! குமாரா! அருள் புரிவாயே


முருகா! முருகா!  தினமும்  துதித்தேன்

முத்தா ! முருகா!  நீயும் வருவாயே


குமரா! குமரா! குதித்தேனே

குறைகள் களைவாயே!

அருளே! அருளே! உனை அடைந்தேனே

அன்பை நீயும் பொழிவாயே!

பயந்துடன் நான் கிடந்தேனே

மயிலும், சேவலுமாய் காத்தாயே!


சரவணபவ சரணடைந்தேன்

உன்னிடமே!


அருவாய்! உருவாய்!

நீ நின்றாய் - முருகா


- முத்து துரை





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...