Thursday, 12 December 2024

முதல் பிரசவம்

நொடிப் பொழுதில் 

கரைந்தேன் கரைந்தேன்

யுகம் முழுதும் 

தவழ்ந்தேன் தவழ்ந்தேன்

போதை உணர்ந்தேன்

பிறவி எடுத்தேன் 

காதல் உணர்ந்தேன்

கற்பனையில் மிதந்தேன்

எல்லாம் என்றேன்

உன்னில் கரைந்தேன்

உயிர்வரை வளர்த்தேன்


உள்ளம் எல்லாம் - உன்னை

வைத்தேன்

உள்ளுக்குள்ளே ஆசை விதைத்தேன்

உயிரைக் கொடுத்தேன்

உதிரம் உதிர்த்தேன்

உயர்வாய் உணர்ந்தேன்

உன்னில் கரைந்தேன்

உயிர்வரை வளர்த்தேன்

வருவாய் எந்தன்

முதல் காதலே!.


- முத்து துரை







No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...