Saturday, 7 December 2024

பிரிவு!..

பட்டம் என்று நினைத்தேன்

வான் உயர பறந்ததும்

பாதியில் விடுவாய் என்று நினைக்கவில்லை...

பிரிவில் தவித்தேன்

வினையென்று நினைத்தேன்

வரம் என்பதை மறந்தேன்...

பாதியில் அறுபட்டேன்

பாவங்கள் புரிந்தேன்

பற்றற்று இருந்தேன்

பேதமாய் போனேன்

பாவியாய் ஆனேன்

போதும் வேட்கை

போகா வாழ்கை....


- முத்து துரை




No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...