Sunday, 29 December 2024

பணத்துடன் நான்?

மனிதன்: ஏன் உன்னை காதலித்தேன்?

பணம்: என்னை காதலிக்காதவர் யாருமில்லை.

மனிதன்: ஏன் என்னை வதைக்கிறாய்?

பணம்: நானா நானா நான் இல்லை, நீ நீ நீயே தான்.

மனிதன் : ஏன் என்னை ஆதிக்கவாதியாக்கினாய்?

பணம் : நான் அதிகம் இருந்தால் அப்படி தான்

மனிதன்: ஏன் என்னை அடிமையாக்கினாய்?

பணம்: என்னில் மயங்காதோர் யாருமில்லை.

மனிதன்: பணமே பணமே கொஞ்சம் நில்லு! ஏன் என்னுடன் வருவதில்லை?

பணம்: எப்போதும் இல்லை இல்லை புலம்புவதால்

மனிதன்: பணமே!பணமே ! ஏன் அடக்குமுறை செய்ய வைத்தாய்? 

பணம் : ஹா ஹா ஹா நீ அடக்க நினைத்தற்கு நானா பொறுப்பு.

மனிதன்: கைக்கு கை மாறும் உன்னை ஏன் தினம் தேடுகிறேன்?

பணம் : உன் மனமிடமே கேள்!


மனிதன்: நீ அதிகம் என்னிடம் ஆனால் என்னை நேசிக்க தான் யாருமில்லை?

பணம்: உன் குணம் சேர்க்கும் உண்மையானவர்களை !

பணம்: நான் தான் எல்லாம், என்  எல்லை எதுவரை என்பது உன்னிடமே !

மனிதன்: நீ அதிகம் என்னிடம் வர நான் என்ன செய்ய?

பணம்: வாழுவித்து, மகிழ்வித்து வாழடா! உன்னுடனே இருப்பேன், உயர்விப்பேன் !எல்லாம் என்னிடமே 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...