தத்தி தாவுது நெஞ்சம்
நாணத்தை அவளின்
நாணத்தை பாடியபடி
தத்தி தாவுது நெஞ்சம்
இதழ்களில் வழிந்தோடும் கனிரசம்
இதமா மெல் இதமா
வெளிவரும் பழரசம் - நா
என்ற பழரசம்
பசைகள் ஏதும் தடவா
பாலாடை மேனி
இரத்தினங்கள் சிந்திய இரத்தினம்
நாணத்தை அவளின்
நாணத்தை பாடியபடி நடைப்போடும்
தாவணி கனவுகள் பல கண்டு
தாவுது மனம் அவள் கண்டு
தத்தி தாவுது மனம் அவள் கண்டு.
துள்ளிடும் மீன்கள்
அள்ளிடும் கண்கள்
அவள் கண்கள்
அகராதி தேடினேன்
ஒவிய பாவை - அவளை வர்ணிக்க
அகராதி தேடினேன்
கிராமத்து பாவையே - உன்னை
வர்ணிக்க அகராதி தேடினேன்.
தத்தி தாவுது நெஞ்சம்
நாணத்தை அவளின்
நாணத்தை பாடியபடி
தத்தி தாவுது நெஞ்சம்
சந்தங்கள் பல சந்தங்கள்
சடுகுடு செய்தது - அவளின் அழகை வருட
சந்தங்கள் பல சந்தங்கள்
சடுகுடு செய்தது
பாத பூஜைக்கு தவம் செய்யும்
பல வண்ண மலரும் - அவளின்
படைப்பை ரசிக்க தன்னை கோர்தது
கூந்தலில் வட்டமிட்ட மறு கணம்
தன்னை அடிமையாக்கியது
கூந்தலின் மணத்தில் திளைத்து..
நாணத்தை அவளின்
நாணத்தை பாடியபடி
மேளங்களும், கானங்களும்
மேலமிடுகிறது..
- முத்து துரை